Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 25 டிசம்பர், 2014

நமதூருக்கு வருகை தரும் காலாண்டர்கள் - அதிர்ச்சி தகவல்கள் ...


ஏற்கனவே சுன்னத்துவல் ஜமாத் மார்க்கத்திற்கு புறம்பான நடந்து கொண்டிருக்கிறது என்று ஒரு சாரார் சூராவளி பிரச்சாரம் செய்து கொண்டு வரும் நிலையில் தற்போது ஆண்டு இறுதி என்பதால் நமதூருக்கு
படைஎடுத்துவரும் விளம்பரதாரர்கள் காலாண்டர் என்ற ஒன்றை வீதி வீதியாக இலவசமாக விநியோகம் செய்து வருகின்றார்கள்.

இந்த சூழ்நிலையில் கடந்த14-12-2014 ஞாயிற்று கிழமை கிழக்கு ஜூம்மா பள்ளிவாசலில் உள்ள ஒரு தனியார் நிருவனம் தனது காலாண்டர் விநியோகம் செய்ய அனுமதி கேட்டு நிருவாகத்தை அனுக முயற்சித்தனர் , அந்த தருனத்தில் முக்கியஸ்தர்கள் ஜமாலியா நகர் காரிய கமிட்டி மீட்டிங் சென்றுவிட்டதினால் லுகருக்கு தான் பார்க்க முடியும் என்று அங்கே உள்ள ஒரு சிலர் விநியோகம் செய்ய நாங்கள் அனுமதி கொடுக்க முடியாது தலைவர்கள் வந்தஉடன் அவர்களிடம் அனுமதி பெற்ற உடன் விநியோகம் செய்யுங்கள் என்று கூறினார்கள்.


இப்படி இருக்கையில் மதியம் 2 மணி முதல் அந்த தனியார் நிருவனர்கள் அவர்களுடைய இலவச காலாண்டரை வீதி வீதியாக சென்று விநியோகம் செய்தனர்.

அதிர்ச்சியை ஏற்படுத்திய காலாண்டர்

இந்த காலாண்டர் நமதூருக்கு தேவையா என்பது அந்த காலாண்டர் வாங்கி பார்த்த பிறகுதான் நமக்கு தெரிய வந்தது. இது முழுக்க முழுக்க இஸ்லாத்திற்கு புறம்பாகவே இந்த காலாண்டர் அட்சிடப்பட்டிருக்கிறது. உருவப்படத்தையே எதிற்கும் நமது மார்க்கம் , எந்த சிலையை அல்லாஹ்வின் ஆணைப்படி நமது இப்ராஹிம் (அலை) தகர்தெறிந்தார்களோ அது போன்ற சிலைகளை அந்த காலாண்டர் முழுவதும் பார்க்க முடிகிறது. மார்க்கம் அனுமதிக்காத செயல்களை நமதூருக்கு  செய்ய தூண்ட அனுமதி அழித்தது யார் ?

விநியோகம் செய்த இவர்கள் வீட்டில் உள்ள பெண்களாக இருந்தாலும் அவர்களிடம் பெயரையும் மொபைல் நம்பரை கட்டாயமாக வாங்கி சென்று உள்ளனர் என்பது நமக்கு அதிர்ச்சி அழிக்கிறது.


இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகளில் கவனமாக செயல்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.


தலைமைத்துவம் இல்லாத ஊர் , ஒரு சுருகாடு அதில் மக்கள் அனைவரும் நடைபிணங்கள் , எனவே தலைமைதுவத்தை உணர்ந்து ஊர் தலைவர், ஜமாத் தலைவர்கள் மற்றும் வார்டு உருப்பினர்கள் தங்களின் பொருப்புகளை உணர்ந்து மக்களை சரியான முறையில் வழி நடத்த வேண்டும் என்பது நம்முடைய அவா.

நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக