Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 22 டிசம்பர், 2014

சென்னை ஐ.ஐ.டி.யில் கேம்பஸ் இன்டர்வியூ முதல் சுற்றில் 880 பேர் பணிக்கு தேர்வு இந்திய நிறுவனங்களில் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.34 லட்சம் சம்பளம்.


சென்னை ஐ.ஐ.டி.யில் முதல் சுற்று கேம்பஸ் இன்டர்வியூ மூலம் 880 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் இந்திய நிறுவனங்களில் தேர்வு பெற்ற 2 பேர் அதிகபட்சமாக ஆண்டுக்கு 34 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறுகிறார்கள்.

சென்னை ஐ.ஐ.டி.

சென்னை ஐ.ஐ.டி.யில் பொறியியல் தொழில்நுட்பம் படிப்புகள் இருக்கின்றன. இங்கு படித்து முடிப்பவர்களுக்கு 2014-15-ம் ஆண்டிற்கான முதல் சுற்று கேம்பஸ் இன்டர்வியூ இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நடைபெற்றது.

தற்போது அந்த கேம்பஸ் இன்டர்வியூவில் 880 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. கேம்பஸ் இன்டர்வியூ பொறுப்பாளர் பேராசிரியர் பாபு விஸ்வநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

880 பேர் தேர்வு

சென்னை ஐ.ஐ.டி.யில் முதல் சுற்று கேம்பஸ் இன்டர்வியூ இந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி, நேற்று (அதாவது நேற்று முன்தினம்) முடிந்தது. இந்த கேம்பஸ் இன்டர்வியூவில் மொத்தம் 1,360 மாணவ-மாணவிகள் பதிவு செய்திருந்தனர்.

இதில் மொத்தம் 295 நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளை தேர்ந்தெடுத்தனர். கேம்பஸ் இன்டர்வியூவில் 880 மாணவ-மாணவிகளை தேர்ந்தெடுத்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 16 சதவீதம் மாணவிகள் ஆகும்.

கடந்த ஆண்டில் நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் மொத்தம் 1,400 மாணவ-மாணவிகள் பதிவு செய்திருந்தனர். 263 நிறுவனங்கள் பங்குபெற்ற இந்த கேம்பஸ் இன்டர்வியூவில் 905 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூவில் அதிக மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

ரூ.34 லட்சம் சம்பளம்

கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு செய்யப்பட்டவர்களில், இந்திய நிறுவனங்கள் மூலம் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.34 லட்சம் சம்பளத்தை 2 பேர் பெற்றுள்ளனர். அதேபோல், வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் அதிகபட்சமாக 1 லட்சத்து 29 ஆயிரத்து 500 அமெரிக்கா டாலர் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதை 3 பேர் பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டின் சிறப்பு என்னவென்றால் புதிதாக 65 நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்துகொண்டன. அந்த நிறுவனங்கள் மொத்தம் 122 வாய்ப்புகளை வழங்கி 114 மாணவ-மாணவர்களை தேர்வு செய்துள்ளனர். அதில் ஓ.எல்.ஏ. கேப்ஸ் நிறுவனம் 32 வாய்ப்புகளையும், பிளிப்கார்டு நிறுவனம் 18 வாய்ப்புகளையும் வழங்கின.

இந்திய நிறுவனங்களான ‘ராபர்ட் போஸ்க்’ நிறுவனம் 16 வாய்ப்புகளையும், சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனம் 10 வாய்ப்புகளையும், ‘ஹனிவெல்’ நிறுவனம் 12 வாய்ப்புகளையும் வழங்கின. இதே போல் ஒவ்வொரு நிறுவனங்களும் வாய்ப்புகள் வழங்கின.

இதில் 61 மாணவர்கள் 2 வாய்ப்புகளையும், 9 மாணவர்கள் 3 வாய்ப்புகளையும், 4 மாணவர்கள் 4 வாய்ப்புகளையும், 1 மாணவர் 5 வாய்ப்புகளையும் பெற்றனர்.

அடுத்த சுற்று கேம்பஸ் இன்டர்வியூ

அடுத்த சுற்று கேம்பஸ் இன்டர்வியூ அடுத்த ஆண்டு (2015) ஜனவரி மாதம் 18-ந் தேதி தொடங்க வாய்ப்பு இருக்கிறது. இந்த சுற்றில் பெரும்பாலும் கல்வி நிறுவனங்கள் அதிகம் பங்கு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மின்னஞ்சல் மூலமாக
சாகுல் ஹமீது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக