Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 8 டிசம்பர், 2014

யாருமே இல்லாத கக்கூஸில் யாருக்கு விளக்கு !

பராமரிப்பு இல்லாமல் பாலடைந்து வரும் நமதூர் கட்டண கழிவரை. கடந்த சில வருடங்களுக்கு முன் பரபரப்பாக கட்டப்பட்டது. நமதூர்
கட்டண கழிவரை முழுமையாக ஒரு மாத காலம் கூட பராமரிப்பு செய்யாமல் இதுவரை கேற்பாடு அற்று காணப்படுகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

அப்படி என்றால் இதன் செலவினங்களை ஏற்ற பொது மக்களின் வரிப்பணம் ஏஏவ்வ்.

சரி விசயத்திற்கு வருவோம். பல காலங்களாக பராமரிப்பில்லாமல் காணப்பட்ட கழிவரையை ஒரு சில சமூக விரோதிகள் பொது சொத்துக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பூட்டிக்கிடக்கும் கழிவரையில் மிண் விளக்கை எரியவிட்டு சென்று விடுவது வளக்கமாகி விட்டது. இது ஒருபுறம் இருக்க இதை கண்டும் காணாமல் நமதூர் மக்களின் நம்பிக்கை பெற்ற பேரூராட்சி தலைவர் இருப்பது தான் பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆள்படுத்துகிறது.

இந்த தருவாயில் அந்த வழியாக சென்ற நமது அத்தா “ யாருமே இல்லாத கக்கூஸில் யாருக்குடா விளக்க போட்டு வைச்சுரிக்கீங்க ” என்று கூறியதை கேட்ட நமது நிருபர் உடனடியாக அந்த மின் விளக்கை அனைக்க முயற்சித்தும் பயனளிக்காமல் மண வேதனையுடன் வீடு திரும்பினார் ( ஏனென்றால் ஈமானின் கடைசி நிலை அது தானே )

நமதூர் பேரூராட்சி இதனை கவணத்தில் கொண்டு பொது சொத்தை வீண் விரையம் செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு நமதூர் மஹல்லா சார்பில் கேரிக்கை வைக்கிறது நமது இனையதளம்.

 நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக