Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 10 டிசம்பர், 2014

பாசிஸத்தை வேரறுத்து,ஜனநாயகத்தை பாதுகாப்போம்!

இந்திய தேசம் சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் கடந்தும் பாதுகாக்கப்பட்டு வரும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள மதசார்பின்மை  அம்சங்கள் தற்போதைய பாசிஸ ஆட்சியாளர்களால் தகர்க்கப்பட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
சாதி,மதம்,இனம்,மொழி,கலாச்சாரம் போன்ற வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் சிறப்பம்சம் என்று உலக நாடுகள் பலவும் வியந்து போற்றிவரும் இவ்வேளையில்,
பாசிஸ சித்தாந்தம் கொண்ட மோடி தலைமையிலான பாஜக அரசு இந்து மதம்,இந்து நாடு என்ற மத பிரிவினையை கையிலெடுத்து கொண்டு ஹிந்தி,சமஸ்கிருதத்தை கட்டாய மொழியாகவும்,பகவத் கீதையை தேசிய புனித?நூலாகவும் அறிவிக்க முயற்சிப்பது சிறுபான்மை சமுதாய மக்களை அச்சுறுத்தும் செயலாகும்.
ஒவ்வொரு மதத்தவர்களுக்கும் அவரவர் சார்ந்துள்ள மதங்களின் வழிகாட்டல் நூல்களே புனிதமானவையாக இருக்கும் போது இந்து மதத்தின் பகவத் கீதையை முஸ்லிம்கள்,கிருஸ்துவர்கள்,சீக்கியர்கள்,ஜைனர்களின் மீது கட்டாயமாக திணிக்க முற்பட்டால்…சோவியத் ரஷ்யாவை போல பல்வேறு கூறுகளாக தேசம் பிளவு பட்டுவிடும் பேராபத்தை ஒவ்வொரு இந்தியனும் உணர வேண்டும்.
உள்ளம் முழுவதும் மத துவேசத்தை சுமந்து கொண்டு நல்லவர்களை போல உலக நாடுகளை ஏமாற்றி வரும் மோடி தலைமையிலான பாசிஸ அமைச்சர்களின் மதசார்பு நடவடிக்கைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு.
தேசிய,மாநில அளவிலான மதசார்பின்மை அரசியல் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் கைகோர்த்து,மதத்தின் பெயரால் நாட்டை பிளவு படுத்த முயற்சிக்கும் பாசிஸ சக்திகளை எதிர்கொள்வது காலத்தின் கட்டாயம்.
அதற்காக இன்னொரு சுதந்திர போராட்டம் தேவைப்படின் அதையும் எதிர்கொள்வோம்.
பாசிஸத்தை வேரறுத்து,ஜனநாயகத்தை பாதுகாப்போம்.

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக