Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 27 டிசம்பர், 2014

‘யாதும்’ ஆவணப் படம் திரையீட்டு நிகழ்ச்சி

‘யாதும்’ ஆவணப் படம் திரையீட்டு நிகழ்ச்சி
பெரம்பலூர் மாவட்ட மாணவர் இந்தியா சார்பில் இன்று பெரம்பலூரில் ‘யாதும்’ என்ற ஆவணப் பட திரையீட்டு நிகழ்ச்சி மிகுந்த
எழுச்சியோடு நடைபெற்றது. இந்நிகழ்வில் இடதுசாரி இயக்க சகோதரர்கள், திராவிட இயக்க சகோதரர்கள், தமிழ் தேசிய சிந்தனையாளர்கள், தலித் இயக்க சகோதரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்த ஆவணப் படத்தில் தமிழக முஸ்லிம்களின் தோற்றம், வரலாறு, வாழ்வியல், கலாச்சாரம் ஆகியன குறித்து காட்சிகளும், கருத்துகளும் தொகுக்கப்பட்டிருந்தன.
இதில் சமூக நல்லிணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல நடைமுறை நிகழ்வுகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. பிரபல வரலாற்று ஆர்வலர் கோம்பை அன்வர் அவர்கள் தன்னுடைய தனிப்பட்ட முன்முயற்சியில் எடுத்த இந்த ஆவணப் படம் மதச்சார்பற்ற களங்களிலும், சமூக நீதி களங்களிலும் தமிழக முஸ்லிம்கள் குறித்த ஆழமான புரிதல்களை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.
இது ஒரு அரிய முயற்சி என்ற வகையில் திரையீட்டு நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய அனைவரும் அவரை ஊக்கப்படுத்தும் வகையில் வாழ்த்திப் பேசினர். ம.ம.க. பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி நிறைவுரையாற்றி அவருக்கு சால்வை அணிவித்து, கேடயம் ஒன்றை பரிசாக வழங்கினார்.
சகோதரர் அரும்பாவூர் தாஹிர் பாஷா நிகழ்ச்சிகளை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார். இதில் பார்வையாளர்களாக முஸ்லிம்களோடு சம அளவில் சகோதர சமுதாயங்களைச் சேர்ந்தவர்களும் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு அரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டு தொடர்ந்து விருதுகளையும் குவித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் பன்னாட்டு அளவிலும் இப்படம் கொண்டு செல்லப்பட இருக்கிறது.
ஆவணப் படம் குறித்து உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய 
எஸ். அன்வர் 9444077171

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக