Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 14 ஜனவரி, 2016

ஹாஜா முஹைதீன் கொலையை தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர்கள் பணி இடமாற்றம்?

ஹாஜா முஹைதீன் கொலையை தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர்கள் பணி இடமாற்றம்?
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் காஜா முகைதீன் என்ற இளைஞர் டிசம்பர் 21 அன்று படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து அப்பகுதி மக்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இதனிடையே ஏர்வாடி, வள்ளியூர் உள்ளிட்ட ஊர்களின் காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 ஏர்வாடியில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய நாககுமாரி தூத்துக்குடிக்கு மாற்றம் செய்யப்பட்டு புதிய காவல்துறை ஆய்வாளராக சார்லஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்பு தக்கலை பகுதியில் ஆய்வளராக பணியாற்றியுள்ளார்.
பணகுடியில் பணியாற்றிய செல்வராஜ் விஜயநாராயணம் காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு பணகுடிக்கு புதிய காவல்துறை ஆய்வாளராக கன்னியாகுமரியில் பணியாற்றிய ஜெயபால் பர்ணபாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 வள்ளியூரில் பணியாற்றிய பிராபாகரன் தக்கலை காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு அதற்கு பதிலாக களியக்காவிளையில் பணியாற்றிய அன்பு பிரகாஷ் வள்ளியூருக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நான்குநேரியில் பணியாற்றிய பொன்னுசாமி தட்டார்மடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு நான்குநேரியில் புதிய காவல் ஆய்வாளராக பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்து நகரில் பணியாற்றியவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக