Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

என் கணவர் தலையில் துப்பாக்கி வைத்து என்னிடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கினர்.


என் கணவர் தலையில் துப்பாக்கி வைத்து என்னிடம் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கினர்.

35 வயது நிரம்பிய முஹம்மது அப்சல் பெங்களூர் தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் ப்ராஜெக்ட் மானேஜராக பணியாற்றி வருகிறார். அவரின் வீட்டு கதவு இரவு மூன்று மணியளவில் பலமாக தட்டப்பட்டது. என்னவென்று பார்க்க கதவை திறந்தவருக்கு பெரும் அதிர்ச்சி. தங்களை டெல்லி போலீஸ் என்று கூறிய ஒரு கும்பல் வீட்டினுள் புகுந்தது. தாங்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்பதற்கான எந்த ஒரு அடையாளத்தையும் காண்பிக்காத அவர்கள் அங்கிருந்தவர்கள் முன் துப்பாக்கியை நீட்டினர்.

கடந்த வெள்ளியன்று நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் புஷ்ரா தபசுமின் கணவர் முஹம்மது அப்சலும் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரை கைது செய்தவர்களும் கைது செய்த விதமும் தனக்கு பெரும் சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக அப்சலின் மனைவி புஷ்ரா பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், வெள்ளி அதிகாலை 3 மணியளவில் எங்கள் வீட்டின் கதவை யாரோ மிக பலமாக தட்டும் சத்தம் கேட்டது. என்னவென்று பார்க்க என் கணவர் சென்றார். கதவை திறந்த அவரை கீழே தள்ளி ஒரு கும்பல் எங்கள் வீட்டினுள் நுழைந்தது. அவர்கள் யார் என்று கேட்டதற்கு தங்களை டில்லி காவல்துறையை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்த அவர்கள் அதற்கான எந்த ஒரு ஆதாரத்தையோ அல்லது அடையாள அட்டையையோ காண்பிக்கவில்லை. மாறாக எங்கள் முன் துப்பாக்கியை நீட்டினர் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் கூறிய அவர், ” என் கணவரின் தலையில் துப்பாக்கியை வைத்து ஆயுதங்கள் எங்கே என்று கேட்டனர். அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்றே எங்களுக்கு புரியவில்லை. பின்னர் வீட்டு முழுவதும் சோதனை செய்த அவர்கள் என் கணவரின் மடிக்கணினி அலைபேசி ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். எனது கணவர் ஒரு சாப்ட்வேர் எஞ்சினியர். நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடப்பவரும் கூட. அவர் தன் வாழ்நாளில் எந்த ஒரு சமூக விரோத செயலிலும் ஈடுபட்டிருக்க வில்லை” என்றும் தெரிவித்தார்.
தங்கள் வீட்டில் சட்டத்திற்கு புறம்பாக எதுவும் இல்லை என்று அறிந்த பின்னர் என்னிடம் வெற்று காகிதத்தை நீட்டி அதில் கையெழுத்திட வற்புறுத்தினர். என் வீட்டில் அவர் செய்த சோதனையில் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்று எழுத்து மூலம் தாருங்கள் நான் கையெழுத்து இடுகிறேன் என்று கூறியும் என்னை வெற்று காகிதத்தில் கையெழுத்திட வைத்தனர் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தன் கணவரின் மடிக்கணினி மற்றும் அலைபேசியுடன் அவரின் கார் மற்றும் பைக்கையும் காவல்துறையினர் எடுத்துச் சென்றுள்ளதாகவும் அதில் அவர்களே ஏதாவது வைத்துவிட்டு தன் கணவர் மேல் குற்றம் சுமத்திவிடுவார்களோ என்று தான் அஞ்சுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக