Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 27 ஜூலை, 2012

தவ்ஹீத் மர்கசுடைய கஞ்சி


நமதூர் தவ்ஹீத் மர்கசுடைய நோன்பு திறக்கும் இப்தார் கஞ்சி தமிழகம் தெரியும் அளவிற்கு தண்ணீராக உள்ளது என்று பொதுமக்கள் கூறினார்கள். இதை நமது நிருபர் ஆராய்ந்து பார்த்ததில் உண்மை என்று தெரியவந்தது. பொது மக்கள் கொடுக்கும் பணத்திற்கு நிறைய அரிசி போட்டு சிறந்த முறையில் கஞ்சி செய்தால் நல்லது என்று நோன்பு திறக்க வருபவர்களும் கஞ்சி வாங்கி செல்பவர்களும் கூறுகின்றனர்.
இதே கஞ்சி மேற்கு அல்லது கிழக்கு பள்ளிவாசலில் வைத்திருந்தால் மிகப்பெரிய சர்ச்சை உண்டாகிருக்கும்.
இதில் நாம் உணவை (கஞ்சியை) குறைகூறவில்லை. மாறாக சிறந்த தரத்தோடு சுவையோடும் வைத்தால் பொதுமக்களுக்கு நல்லது என்றுதான் குறிப்பிடுகிறோம். என்னென்றால் இந்த கஞ்சி பொதுமக்களுடைய பணத்திலிருந்து தயார்செயயப்பட்டது என்பதை நாம் உணரவேண்டும்.
 நமது நிருபர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக