Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 17 ஜூலை, 2012

துபாய்:அமெரிக்க கப்பற்படையின் வெறிச்செயல் – துப்பாக்கிச்சூட்டில் தமிழர் பலி!


Indian(Tamil)  fisherman killed in US Navy firing off Dubai
துபாய்:அமெரிக்க கப்பல் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிப்புற கடற்பகுதியில் வைத்து மீன்பிடி படகு மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சார்ந்த மீனவர் பலியானார். 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.
ராமநாதபுரத்தைச் சார்ந்த சேகர்(வயது 26) என்பவர் அமெரிக்க கப்பற்படையின் அநியாய துப்பாக்கிச்சூட்டில் பலியான நபர் ஆவார். மணிகண்டன், முத்துக்கண்ணன் ஆகியோருக்கு துப்பாக்கிச்சூட்டில் காயம் ஏற்பட்டது.

பாரசீக வளைகுடாவின் 30 கடல் மைல் தொலைவில் உள்ள ஜெபல் அலி கடல் பகுதியில் வைத்து துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. மீன் பிடித்தலுக்கு உபயோகிக்கும் 9 மீட்டர் அகலம் கொண்ட 3 எஞ்சின்களை உடைய ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த படகு மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
நான்கு இந்தியர்களும், இரண்டு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்தவர்களும் படகில் இருந்தனர். இதுக்குறித்து அமெரிக்க கப்பல் படையின் பஹ்ரைன் 5-வது தொகுதியின் செய்தி தொடர்பாளர் லெஃப்டினண்ட் கிரேக் ராயில்சன் கூறியது: ‘அமெரிக்காவிற்கு சொந்தமான USNS Rappahannock எண்ணெய் கப்பல், ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் துபாயிலிருந்து புறப்பட்டது. இக்கப்பல் பாரசீக வளைகுடாவின் 30 கடல் மைல் தொலைவில் உள்ள ஜெபல் அலி கடல் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது மீன்பிடி படகு ஒன்றில் நான்கு பேர் அமெரிக்க எண்ணெய் கப்பலை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தை பார்த்து அமெரிக்க கப்பற்படையினர் அவர்களை எச்சரித்தனர். எனினும் அவர்கள் படகு எதிர்நோக்கி வந்தது. தற்காப்புக்காக அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் மீனவர் ஒருவர் பலியானார். படகினை சிறைபிடித்த அமெரிக்க கப்பல் படையினர் மர்ம படகினை ‌சோதனை நடத்தினர். படகில் 4 இந்தியர்கள், 2 துபாயைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளது தெரியவந்தது. அவர்கள் ஏதோ பயங்கரவாத தாக்குதல் நடத்த வந்த ஈரானியர் என தவறாக நினைத்து துப்பாக்கியால் சுட்டனர்.’ இவ்வாறு அவர் கூறினார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கப்பற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க படையினரை புதிதாக பீடித்துள்ள ஈரானிய ஃபோபியாவால் தாயகத்தை விட்டு அந்நிய நாட்டுக்கு மீன்பிடித் தொழிலுக்கு சென்ற அப்பாவி தமிழர் ஒருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் குறித்து மத்திய, மாநில அரசுகளும், தமிழக அரசியல் கட்சிகளும் என்ன பதில் கூறப்போகிறார்கள்?
Thanks: Thoothuonline

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக