Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 27 மே, 2014

தாய்மையின் அன்புக்கு 6 அடி உயர சுவர் மட்டுமல்ல எவ்வளவு பெரிய கோட்டையின் சுவர்களையும் தடைகளையும் தகர்க்கும் வல்லமை உண்டு


ஒரு சிறைத்துறை அதிகாரியின் பேட்டியின்போது. சிறையில் உங்களுக்கு மறக்கமுடியாத அனுபவம் என்ற கேள்விக்கு அவர் கூறியது 

அன்று அதிகாலையிலேயே அந்த சிறைச்சாலை அமளிதுமளிபட்டது காரணம் அந்த சிறையிலிருந்து ஒரு பெண் தப்பிவிட்டாள் ஆறடி உயர தடுப்புசுவற்றை தாண்டி எந்த ஆண்கைதியும்கூட இதுவரை அங்கு தப்பியதில்லை ..

கைதி தப்பி விட்டதால் காவல் பணியில் இருந்த பலருக்கும் தண்டனை கிடைக்க கூடும் என்பதால் சிறை நிர்வாகம் அப்பெண்ணை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது 

உயர் அதிகாரிக்கு தகவல் தரப்பட்டு இவரும் என்கொயரிக்கு வந்துவிட்டார் 

விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே 11 மணியளவில் அந்த பெண்ணே சிறைச்சாலைக்கு திரும்ப வந்துவிட்டாள் ஆனால் கூடவே ஒரு சிறுமியுடன்

சிறை நிர்வாகம் நிம்மதியடைந்தது 

விசாரணையில் தெரிந்தது இதுதான் 

இவள் வசிப்பதே ப்ளாட்பார்மில் காவல் துறையினர் இவளை ஒரு திருட்டுகேசில் சம்மந்தபடுத்தி சிறையில் கொண்டுவந்து தள்ளிவிட்டனர் 

இந்த பெண்ணை கைது செய்யும்போதே அந்த பெண் அந்த காவலர்களிடம் கெஞ்சியிருக்கிறார் ..

அய்யா நான் சத்தியமாக திருடவில்லை ஆனாலும் என்னை ஜெயிலில் போடுவதைபற்றி நான் கவலைப்படவில்லை என் மகள் ஒருத்தி இருக்கிறாள் அவளுக்கு என்னைவிட்டால் யாருமில்லை
நான் இல்லாமல் தவித்துபோய்விடுவாள் அவள் இங்குதான் எங்காவது சுற்றிகொன்டிருப்பாள் நீங்கள் இங்கேயே இருங்கள் நான் அவளை தேடி அழைத்துவந்துவிடுகிறேன் என மீண்டும் மீண்டும் கெஞ்சியிருக்கிறாள்

அப்படி சொல்லி எங்களிடமிருந்து தப்பிக்க பார்கிறியா ஏறுவண்டியில என மிரட்டி அன்றே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர் 

சிறைச்சாலையிலும் அந்த பெண் சிறை அதிகரிகளிடமும் அதேபுலம்பலை புலம்பியிருக்கிறார். 
என்னை ஒரு மணிநேரம் வெளியில் விடுங்கள் கண்டிப்பாக நான் திரும்ப வந்துவிடுவேன் என்று 

ஆனால் காதுகொடுத்து கேட்கத்தான் ஆட்கள் இல்லை 

சிறையில் அடைக்கப்பட்ட அந்த பெண்தான் இரவில் அந்த சாகசத்தை செய்திருக்கிறார் சொன்னதுபோலவே குழந்தையுடன் திரும்ப வந்து தனது நேர்மையையும் நிருபித்திருக்கிறார் 

தாய்மையின் அன்புக்கு 6 அடி உயர சுவர் மட்டுமல்ல எவ்வளவு பெரிய கோட்டையின் சுவர்களையும் தடைகளையும் தகர்க்கும் வல்லமை உண்டு 

அன்னையின் அன்பிற்கு இணையான ஒன்று ஏதுமில்லை

1 கருத்து: