Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 27 மே, 2014

நரேந்திர மோடி பதவியேற்பு விழா: வகுப்புவாத கோஷங்கள்; உலக தலைவர்கள் அதிர்ச்சி!


நரேந்திர மோடி பதவியேற்பு விழா: வகுப்புவாத கோஷங்கள்; உலக தலைவர்கள் அதிர்ச்சி!
இதுவரை இந்திய பிரதமர்கள் பதவி ஏற்பு விழாவில் இல்லாத நடைமுறையாக நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதன் முறையாக வகுப்புவாத கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது வெளிநாட்டு பார்வையாளர்களையும், விருந்தினர்களையும், மதசார்பற்றவாதிகளையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக நேற்று மாலை 6.00 மணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடைய பதவி பிரமாணம் நிகழ்ச்சி முடிந்ததும் பார்வையாளர்கள்மத்தியிலிருந்து ‘ஜெய் ஶ்ரீராம்..! பாரத் மாதாகி ஜெய்!!” – என்ற கோஷங்கள் உரக்க எழுந்தன.
அதன் பிறகு மரபு ரீதியாக இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மேடைக்கு வர தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தேசிய கீதம் முடிந்ததும், மேடையிலிருந்த பாஜக தலைவர்களும், பார்வையாளர்கள் மத்தியிலிருந்த இந்துத்துவவாதிகளும் மீண்டும் “ஜெய் ஶ்ரீராம்..! பாரத் மாதாகி ஜெய்..!!” என்று கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.
இது பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த வெளிநாட்டு பிரதிநிதிகள், பார்வையாளர்கள் மற்றும் மதசார்பற்றவாதிகள் மத்தியில் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஏனென்றால், மதசார்பற்ற அரசியலமைப்பின் ஆட்சி, அதிகாரம் கொண்ட இந்திய நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக இந்த சம்பவம் நடந்துள்ளது. அத்தோடு, இதே கோஷங்கள்தான் 1990-களில், இந்துத்துவ வெறி இயக்கமாக உருவெடுத்தது. அதன் விளைவாக உத்திரப்பிரதேசத்தின் அயோத்தியில் 15-ம், நூற்றாண்டின் பழமைவாய்ந்த பாபரி மசூதி இடிக்கப்பட்டது. இந்திய ஜனநாயகமும், மதசார்பின்மையும் கேலிகூத்தாக்கப்பட்டன.
மோடியின் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு 44 பேர் கொண்ட அவரது புதிய அரசின் உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பாஜகவின் தலைவர் ராஜநாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி மற்றும் நஜ்மா ஹெப்துல்லாஹ் ஆகியோர் இதில் அடங்குவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக