Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 16 மே, 2014

நமதூரில் நேற்று நடந்த அல்லாஹ்வின் அத்தாட்சிகள்...


அல்லாஹ்வின் மாபெறும் கிருபையால் நேற்று நமதூரில் இரவு நேரத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கியது. அதற்கு முன் கிட்ட தட்ட அஸர் மஃக்ரிப் நேரங்களில் குளிர்ந்த காற்று வீசியது. இந்த காற்று வீசும் போது நமக்கு
அல்லாஹ் தன் திருமறையில் கூறிய அந்த வசனம் தான் நினைவுற்கு வருகின்றது.

“ அவன்தான் மழைக்கு முன்னதாக (குளிர்ந்த) காற்றை நற்சொய்தியாக அனுப்பி வைக்கின்றான். (மனிதர்களே) நாம்தான் மேகத்திலிருந்து பரிசுத்தமான நீரை பொழியச் செய்கின்றோம். ”                           அல்குர்ஆன் 25 : 48



பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இறுந்தன. இதனால் மக்களில் நடமாட்டம் அதிகமாக இல்லை. இரவில் இறங்கிய மழையால் ஓர் அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டன. இந்த நிகழ்வும் நமக்கு அல்லாஹ் அத்தாட்சி என்பதை நமது நிருபர்கள் பேசிக்கொண்டு இருந்தனர். 

“அல்லாஹ்வே மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து உயிரிழந்த பூமிக்கு உயிரூட்டகிறான். (நல்லுபதேசத்திற்கு) செவிசாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது."                           அல்குர்ஆன் 16 : 65  


இந்த இரண்டு புகைப்படம் பகல் நேரத்தில் எடுத்தது


நமது நிருபர்

2 கருத்துகள்: