Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 4 மே, 2014

நமதூர் மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு....



பெரம்பலூர் மாவட்டத்தில் 17.05.2012 முதல் வருவாயத்துறையினரால் வழங்கப்படும் சாதி, வருமானம் மற்றும் இருப்பிடச்சான்றுகள் மின் ஆளுமைத்திட்டத்தின் கீழ் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. இச்சான்றுகளை பெரம்பலூர், குரும்பலூர், குன்னம், லப்பைக்குடிக்காடு, கீழப்புலியூர், வெங்கலம், வாலிகண்டபுரம், பசும்பலூர், கொளக்காநத்தம், செட்டிகுளம் மற்றும் கூத்துர்ர் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களிலும் மற்றும் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை வங்கிகளிலும் பொதுமக்கள் விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
2013-14 ம் கல்வியாண்டில் 80325 சான்றுகள் மின் ஆளுமைத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு, பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் பயன்பெற்றுள்ளனர். 
எனவே, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பள்ளி இறுதித்தேர்வு எழுதி மேற்படிப்பு படிக்க செல்லவிருக்கின்ற மாணவ மாணவியர்கள் மின்ஆளுமைத்திட்டத்தைப் பயன்படுத்தி தங்களது மேற்படிப்பிற்கு தேவையான சாதி, வருமானம் மற்றும் இருப்பிடச்சான்றுகளை தொடர்புடைய வருவாய் ஆய்வாளர் அலுவலங்களில் முன்னரே விண்ணப்பித்து பெற்று பயன் அடையுமாறு பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக