Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 6 மே, 2014

நிதியால் சுதந்திரத் “தீ”யை பற்ற வைத்த உமர் சுப்ஹானி

தேச விடுதலைக்காக போராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதிதிரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டிகூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ்நிதி என்றும் பெயரிட்டனர். அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தை பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென காந்திஜி அறிவித்தார்.

பம்பாயின் மிகப்பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர். லட்சக்கணக்கில் நிதி திரண்டு கொண்டிருந்த அந்நேரத்தில் பம்பாயின் மிகப்பெரிய பஞ்சாலையின் அதிபரான உமர் சுப்ஹானி என்ற இஸ்லாமியர் காந்திஜியிடம் நேரில் சென்று, திலகர் நினைவு சுயராஜ் நிதிக்காக 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். காசோலையை கையில் வாங்கிய காந்தியின் கண்கள் அதில் நிரப்பபட்டிருந்த தொகையை வாசித்தபோது ஆச்சர்யத்தால் விரிந்தது.
காங்கிரஸ் கமிட்டியின் நிதி திரட்டும் திட்டத்தை ஒருவரே நிறைவேற்றித் தருகிறாரெ என்ற மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், சுதந்திரப்போராட்ட நிதி என்பதால் அதில் பலரது பங்களிப்பும் இருந்தால்தான் அது சிறப்புடையதாக அமையும் என்று காந்திஜி கருதினார். எனவே அக்காசோலையை உமர் சுப்ஹானியிடமே திருப்பிக்கொடுத்து, சில லட்சங்கள் மட்டும் வழங்குங்கள் என்கிறார். காந்திஜியின் விருப்பப்படி சில லட்சங்களை உமர் சுப்ஹானி வழங்கினார்.
ஒரு கோடி ரூபாயை திலகர் நினைவு சுயராஜ் நிதிக்கு உமர் சுப்ஹானி வழங்க முன்வந்த செய்தி ஆங்கில அரசுக்கு எட்டுகிறது. பம்பாய் மாகாண வைஸ்ராய் உடனடியாக உமர் சுப்ஹானியின் தொழிலை முடக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறார். உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் உற்பத்தியாகும் பஞ்சை அரசே விற்றுத்தரும் என்று நிர்பந்தப்படுத்தி வாங்கி மிகக் குறைந்த விலையில் விற்றது. இதனால் உமர் சுப்ஹானிக்கு ஏற்பட்ட நஷ்டம் 3 கோடியே அறுபத்து நான்கு லட்சம். இதனை அவரது சகோதரி பாத்திமா இஸ்மாயில் ஒரு பத்திரிக்கைப் பேடியில் குறிப்பிட்டுள்ளார். 
அந்நியத்துணி பகிஷ்கரிப்புப் போராட்ட முனைப்புடன் நடந்து கொண்டிருந்தது,  அந்நியத்துணிகளை உங்கள் பஞ்சாலைகளில் வைத்து எரியூட்டலாமாடூ என்று காந்திஜி கேட்டார். அதற்கு என் பஞ்சாலை இதை விட வேறு ஒர் நல்ல காரியத்திற்குப் பயன்படவாப்போகிறது என்று உமர் சுப்ஹானி பதிலளித்திருக்கிறார். அந்நிய துணிகளைத்தீயின் நாவுக்குத்தின்னக் கொடுக்கும் எழுச்சிமிக்க நிகழ்ச்சி காந்திஜி தலைமையில் உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் நடைப்பெற்றது. 
ஆங்கில அரசால் தனது தொழிலுக்கு மேலும் இடைஞ்சல்கள் வரும் எனத்தெரிந்தும், தன் பஞ்சாலையை அந்நியத்துணிகளை எரியூட்டும் களமாக அமைத்துக்கொடுத்ததோடுஇ 30 ஆயிரம் மதிப்புள்ள அந்நியத்துணிகளையும் எரியூட்ட வழங்கினார். 1921 அக்டோபர் 9 ஆம் தேதியும் அந்நியத் துணிகளை எரியூட்டும் மற்றொர் நிகழ்ச்சி உமர் சுப்ஹானியின் பஞ்சாலையில் நடைப்பெற்றது. அந்நியத்துணி பகிஷ்கரிப்பு போராட்டாத்திற்கு களம் அமைத்துக் கொடுத்ததற்காக உமர் சுப்ஹானிக்கு பிரிட்டீஷ் அரசு கொடுத்த இன்னல்கள் ஏராளம். 
தேச விடுதலைக்காக கொடுத்தும் இழந்தும் பொருளாதார தியாகங்களைச் செய்த உமர் சுப்ஹானியின் பெயரை இனியாவது இந்திய விடுதலை வரலாறு உச்சரிக்குமா?
நன்றி : பாக்யா இதழ்
செய்தி உதவி தூது ஆன்லைள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக