Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 16 மே, 2014

லப்பைகுடிகாட்டில் கழிவுநீர் வடிகால் வசதி கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை


லப்பைகுடிகாட்டில் கழிவு நீர் வடிகால் வசதி செய்துதரகோரி பேரூராட்சி அலுவலகத்தை குடியிருப்புவாசிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் அருகேயுள்ள லப்பைகுடிகாடு பேரூராட்சியின்11 மற்றும் 13 வது வார்டு பகுதியில் 1000க்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகின்றனர்.இப்பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதிகள் ஏதும் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதிகளில் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து இப்பகுதியினர் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் சுகாதாரக்கேடு அதிகரித்தது. 

இந்நிலையில் நேற்று மதியம் ஆவேசம் அடைந்த இப்பகுதியினர் கவுன்சிலர் பதுருன்னிஷா, மற்றும் நூருல்ஹீதா தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து செயல் அலுவலர் சோமசுந்தரம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.இதையடுத்து மக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி தினகரன்
புகைப்படம் நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக