Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

விவிஐபி செல்லில் ஜெயலலிதா; கைதி எண். 7402


சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 23ஆம் செல்லில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட கைதி எண். 7402.

பெண்கள் சிறைக்கு அருகில் இவரது செல் இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு படுக்கை, மின்விசிறி மட்டும் தனி பாத்ரூம் வசதிகள் உண்டு. குற்றவாளிகளுக்கான வெள்ளை உடை அவருக்கும் அளிக்கப்பட்டது.

அவரது இரவு உணவு ராகி உருண்டை, 200 கிராம் சாதம், மற்றும் 2 சப்பாத்திகள். ஆனால் இது வேண்டாம் என்று பழங்கள் வாங்கி சாப்பிட்டதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரு முறையே கைதி எண் 7403, 7404, 7405 ஆகியன வழங்கப்பட்டுள்ளது. சாஃப்ட்வேர் பொறியாளர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சுபா என்பவருக்கு ஒதுக்கப்பட்ட சிறையில் சசிகலா, இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டனர்.

சுதாகரனுக்கு முன்னாள் கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சரும் சுரங்க தாதாவுமான ஜனார்தன் ரெட்டி இருக்கும் அறைக்கு அடுத்த விஐபி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

உடல் நிலை பற்றி ஜெயலலிதா புகார் எழுப்ப அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

உயர்பாதுகாப்பு மத்திய சிறையான இங்கு விவிஐபி செல்லில் உள்ளே செல்லும் முதல் நபர் ஜெயலலிதா ஆவார்.

நன்றி தமிழ்இந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக