Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்புபொதுமக்கள் முற்றுகை

நடந்தது ஒன்று ! ஆனால் செய்தி முற்றிலும் ஒறுதலைபச்சம் !
இன்ஷா அல்லாஹ் நமது ஆசிரியர் இதை பற்றி செய்தி சேகரித்து கொண்டு உள்ளார். கூடிய விரைவில் முழு தகவலும் வெளியிடப்படும்.


குன்னம்,: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பென்னக்கோணம் கிராமத்தில் விநா யகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலை வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டிற் கு பின்னர் நேற்று சிலையை காவிரியில் கரைத்திட விழா கமிட்டி குழுவினர் மற்றும் பொது மக்கள் வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

இந்நிலையில் குன்னம் வட்டாட்சியர் மணிவேல், மங்களமேடு டிஎஸ்பி கோ விந்தராசு, இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியம், ஆர்ஐ இளவரசன், விஏஓ மனோக ரன் மற்றும் போலீசார் பென்னக்கோணம் கிராமத்திற்கு சென்று விநாயகர் சிலையை லப்பைக்குடிக்காடு பேரூராட்சி வழியாக எடுத்து செல்லக் கூடாது, மாற்று வழியில் சிலையை எடுத்து செல்லுங்கள், இல்லையேல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அறிவுறுத்தி, லப்பைக்குடிக்காடு பேரூ ராட்சி வழியாக சிலையை கொண்டு செல்வதற்கு அனுமதி மறுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பென்னக்கோணம் கிராம மக்கள் சிலையுடன், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒவ்வொரு வருடமும், லப்பைக்குடிக்காடு வழியாக சிலையை கொண்டு செல்ல அனுமதித்து விட்டு தற்போது வேண்டுமென்றே வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் பராபட்சத்துடன் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி கோஷங்களை எழுப்பியதோடு, லப்பைக்குடிக்காடு பேரூராட்சி கழிவு நீர் அ¬ னத்தும் பென்னக்கோணம் வழியாக தான் செல்கிறது என கேள்வி எழுப்பி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

செய்தி தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக