Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 4 செப்டம்பர், 2014

ஐந்து S கள் ....

ஐந்து Sகள்

பரப்பரபான இந்த உலகத்தில் அண்டைவீட்டாரை கூட யார் என்று தெரியாமல் வாழும் சமூகம் .தன் கலையும்.கலாச்சாரத்தையும் மறந்து தன்னுடைய அடையாளத்தை இழந்து வாழ்கின்றனர். இதன் மத்தியில் வாழும் இஸ்லாமியர்கள் இந்த உலக அலங்காரத்தை பார்த்து தன்னுடைய நேரான பாதையை விட்டு விலகும் நிலைக்கு செல்கின்றனர்.ஒரு நபரை அல்லாஹ்வின் நேசத்தை விட்டு உலக நேசராக மாற்றும் தன்மை இந்த உலகில் பல சாதனங்கள் உள்ளது .அவைகளில் சில முக்கியமானவற்றை இங்கு ஐந்துSகள் என்று வகைப்படுத்துவுள்ளேன். 

அவைகள்
Songs
Show
Sex
Sports
Science 

Songs
அதாவது இசை மற்றும் இசையோடு கூடிய பாடல். இன்று பல இளைஞர்கள் சினிமா பாடல்களையும் மேலை நாட்டு பாடகர்களின் பாடல்களையும் கேட்காமல் இருக்க முடியாவில்லை என்று கூறி அதற்கு எப்போழுது அடிமையாகி கிடக்கின்றனர். எங்கு சென்றாலும் அலைபேசியில் பாடலை கேட்டுக்கொண்டு இருக்கின்றனர். காலையில் எழுந்தவுடம் காதில் பாட்டு ஒளிக்க ஆரம்பம் ஆகி இரவு தூங்கபோகும் வரை ஒளிக்கிறது. சிலருக்கு பாடல் கேட்காமல் தூக்கம் வருவதில்லை
இப்படி இசைக்கு அடிமையாகி அவர்கள் பித்து பிடித்தவர்கள் போல் ஆகின்றனர். இசைக்கு முன்னுரிமை கொடுப்பதனால் அவர்கள் சுயசிந்தனை, ஆராய்யும் ஆற்றல்,பகுத்தறிவு போன்றவற்றை இழந்து வாழ்கின்றனர். 24 மணி நேரமும் அவர்கள் காதில் பாடல் ஒளிப்பதினால் அல்லாஹ்வை பற்றிய நினைப்பு அகற்றப்படுகிறது. அவன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதையும் மறக்கிறான். ஒரு ஆய்வின் அறிக்கை கூறுவது: இசை மூலம் ஒரு நபரை எந்த ஒரு சூழ்நிலையிலும் அவனுடைய உண்ர்வை மாற்ற முடியும் அதாவது இசை மூலம் ஒரு நபரை காதலில் சிக்கவைக்க முடியும் அதேபோல் ஒரு நபரை கோழையாக மாற்ற முடியும் என்று.
இதை மார்க்க ரீதியாக பார்க்த்தால்;
அவர்களிலிருந்து (வழி தவறச் செய்ய) நீ சக்தி பெற்றிருக்கின்றவர்களை உன் கூப்பாட்டைக் கொண்டு வழி தவறச் செய். உன்னுடைய குதிரைப்படைகளையும், காலாட் படைகளையும் அவர்கள் மீது ஏவி விடு. (அவர்களுடைய) செல்வங்களிலும், பிள்ளைகளிலும் நீ கூட்டாகவும் இருந்து கொள். இன்னும் (பொய்யானவற்றைக் கொண்டு) அவர்களுக்கு வாக்களித்து விடு. ஏமாற்றத்தைத் தவிர, வேறு எதையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை என்றும் (இறைவனாகிய) அவன் கூறினான் 
அல் குர்-ஆன்17:64
விளக்கம்
எந்த ஒரு சப்தம் அல்லாஹ்விற்கு கீழ்ப்படிதலை விட்டும் அவனைத் தடுக்கின்றதோ அத்தகைய சப்த ஒலிகளைப் பற்றித் தான் மேற்கொண்ட வசனம் குறிப்பிடுகின்றது என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (இப்னு கதீர்)


Shows
அதாவது ஆடம்பரம் .இந்திய துணைக்கண்டத்தில் மட்டும் 34.7% பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கின்றனர். இதை நான் சொல்லவில்லை உலகவங்கியின் அறிக்கை கூறுகிறது. இது ஒருபுறம் இருக்க நாட்டில் தலைவிரித்தாடும் ஆடம்பர வாழ்க்கையும் தனிநபர் வரம்புமீறிய செலவினங்களும் நம்மை வேதனையடையச் செய்கிறது. உபயோகிக்கும் பொருட்களின் விலையிலும் தரத்திலும்தான் ஏழையும் பணக்காரனும் வேறுபடுகின்றார்கள். தன்னுடைய செல்வத்தை பிறர் அறியவேண்டும் என்று செல்வந்தர்கள் செலவு செய்தால் தன்னையும் மேல்மட்ட குடியினராக அடையாளம் காட்டவேண்டும் என்று ஏழை நினைக்கின்றான் இதனால்தான் இன்று பட்டிதொட்டிகளிலெல்லாம் தொலைக்காட்சிகளை காணமுடிகின்றது.
இதேபோன்று ஒரு காலத்தில் ஆடம்பரப் பொருட்களாக இருந்த எத்தனையோ பொருட்கள் இன்று அத்தியாவசிய சாதனங்களாய் மாறிக்கொண்டு வருகின்றன. பணக்காரர்கள் உபயோகிக்கும் அத்தனை சாதனங்களையும் தானும் உபயோகிக்க வேண்டும் என்று ஏழை நடுத்தர வர்க்கம் ஆர்வம் காட்டுகிறது என்றாலும் ஏழைகள் எங்களை எட்டிபிடித்து விடக் கூடாது என்பதில் பணக்கார வர்க்கம் விழிப்புணர்வுடனேயே இருக்கின்றது. அழகு சாதனப்பொருட்களிலிருந்து குடும்ப நிகழ்ச்சிகள் வரை இந்த போட்டியை காண முடிகின்றது.


பிறர் நம்மை செல்வந்தர் என்று கூறவேண்டும் என்பதனால் வட்டிக்கு பணம் வாங்கியாவது செய்வேன் என்று தன்னுடைய வீட்டு நிகழ்ச்சியை செய்கின்றனர். அப்படி செய்யும் நிகழ்ச்சியின் அல்லாஹ் தன்னுடைய உதவியையும் அபிவிருத்தியையும் தடுத்துவிடுகிறான்.

இறைவன் தன் திருமறையில்
இன்னும் அத்தகைய (பெருமையடிப்ப)வர்கள் (பெருமையை நாடி) மனிதர்களுக்கு காண்பிப்பதற்காகத்தான் செலவு செய்வார்கள். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசம் கொள்ளவும் மாட்டார்கள். எவனுக்கு ஷைத்தான் தோழனாக இருக்கின்றானோ அவன் தோழனால் மிகக்கெட்டவன். 
அல்குர்ஆன் 4:38

இன்னும் சிலர் தன்னை அனைவரும் நல்ல மனிதர் என்று கூறுவற்தகாக பிறர்க்கு காண்பிபதற்காக தொழுகை, ஜகாத் போன்ற கடமைகளை செய்கின்றனர்.அல்லாஹ் இதை பற்றி கூறுவது
“இன்னும் அல்லாஹ்வுக்காக தொழாமல் பிறருக்கு காட்டுவதற்காக தொழுபவர்கள் குறித்து அல்லாஹ் கூறுகிறான்,
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள். மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள் ." 
அல் குர்ஆன் 107:2-7
இந்த ஆடம்பரவாசிகள் தேவைக்கு அதிகமாக செலவு செய்வார்கள் தேவையுடையவர்கள் கேட்டால் மறுப்பார்கள் இவர்களை பற்றி அல்லாஹ் கூறுகிறான்
(அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்- குற்றவாளிகளைக் குறித்து- "உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?" (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்; "தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. (வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்". என்று கூறுவார்கள். 
அல் குர்ஆன் 74:40-46
மனிதர்கள் எந்த அளவுக்கு எளிமையாக இருக்க வேண்டுமானால்... சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது கையிலிருந்து தவறி கீழே விழும் சிறு துண்டு உணவைக்கூட எடுத்து துடைத்து விட்டு சாப்பிடச்சொல்கிறது இஸ்லாம். இதுபற்றி இறைத்தூதர் நபி(ஸல்...) அவர்கள் கூறியிருப்பதாவது

''உங்களில் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் ஒருத் துண்டு உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தம் ஏதும் பட்டிருந்தால் அதை நீக்கி விட்டு சாப்பிடட்டும் அதை ஷைத்தானுக்கு விட்டு விட வேண்டாம்" என்று நபி (ஸல்...)அவர்கள் அறிவுருத்தினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
நூல்கள்: முஸ்லிம், அஹமத், அபூதாவூத், திர்மிதி
இப்படி சொல்லப்பட்ட ஒரு மார்க்கத்தில் இருப்பதாக கூறிக்கொண்டே இந்த அளவுக்கு இவர்கள் உணவுபொருட்களை வீணடிக்கின்றனர்

Sex
அதாவது ஆபாசம் மற்றும் விபச்சாரம். இன்று இந்தியாவில் அனைத்து சமூக மக்களும் நவீன கலாச்சாரத்தால் சீரழிந்து கொண்டு இருக்கிறனர். இதற்கு நம்முடைய இஸ்லாமிய மக்களும் விதிவிலக்கு அல்ல. பிள்ளைகளுக்கு மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொடுக்காமல் உலகக் கல்வியைக் கற்கவே அதிகம் கவனம் செலுத்துகிறோம். படிக்கும் வயதில் அவர்களுக்கு கைபேசி வாங்கிக் கொடுக்கிறோம். அதனை அவர்கள் நல்ல விதத்தில் பயன்படுத்துகிறார்களா என்று நாம் கவனிக்க தவறுகிறோம்.
பிள்ளைகள் பொது விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இருக்கவும், கல்வியில் அக்கறை காட்டாமல் இருக்கவும் யூதர்கள், இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் இணையதளத்தில் ஆபாசப் படங்களை அதிகம் பரப்பி உள்ளனர்.

இன்றைய நவீன கலாச்சாரம் என்ற பெயரில் பல அசிங்கங்கள் அரங்கேருகின்றது. இன்று உடம்பை மறைக்க புர்கா போகி பலபலக்கும் புர்காவாக மாறியுள்ளது. ஆண்கள் தரையில் உள்ள குப்பைகளை தன்னுடன் எழுத்து செல்லும் அளவுக்கு அவர்களுடைய ஆடை கனுங்காலை விட்டும் இறங்கி இருக்கிறது.ஆடை அதிகம் அணிய வேண்டிய பெண் ஆடையை குறைத்து அணிகிறாள் ஆடையை குறைத்து அணிய வேண்டிய ஆண் அதிகப்படுத்தி அணிகின்றான். இன்னும் ஆண்களும் பெண்களும் சர்வசாதரணமாக சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது.
இன்று பல இஸ்லாமிய வாலிபர்கள் அன்னிய பெண்னை பார்ப்பது ஒரு பெரிய பாவம் அல்ல என்று கூறி அவர்களை ரசிகின்றனர். பள்ளி கல்லூரியில் அவர்களுக்கு ஏற்ப்படும் தொடர்பு தவறான வழியிக்கு ஈட்டுசெல்லும்.
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் அன்னிய பெண்னை பார்க்கும் முதல் பார்வை உன்னுடையது அடுத்து அவளை மீண்டும் பார்க்க தூண்டி அவளை மீண்டும் பார்க்கும் இரண்டாவது பார்வை ஷைத்தானுடையது என்று. விபச்சாரம் கண்களில் தான் ஆரம்பம் ஆகிறது அடுத்து இதயத்தில் சென்று அது அல்லாஹ்வின் பயத்தை அகற்றுகிறது பின் அது தீய செயலை செய்யதூண்டுகிறது.
விபச்சாரம் செய்பர்வகளை நபி(ஸல்) அவர்கள் மிகவும் கண்டித்துள்ளார் அவர்கள் மறுமை வாழ்வு நரகத்தில் என்று அல்லாஹ் கூறியுள்ளான். விபச்சாரம் செய்யும் பெண்னை மார்க்க சட்டம் படி எழுவது சவுக்கடி கொடுக்க சொல்கிறது.அதைசெய்யும் ஆண்களுக்கும் தண்டனை கொடுக்கவேண்டும் என்றவறம்பும் இருக்கிறது
இன்று நீங்கள் பார்க்களாம் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தோனேசியவும் ஒன்று அங்கு தலைதூக்கி இருக்கும் விபச்சாரத்தினால் அல்லாஹ் தன்னுடைய கோபத்தை அடிக்கடி காட்டுகிறான் ஆனாலும் அந்த மக்கள் திருந்துவதில்லை.


Sports
ஒரு இஸ்லாமியன் உடல் ஆரோக்கியத்திற்கு விளையாட்டு அவசியம். அந்த விளையாட்டு இஸ்லாமிய வரைமுறைக்கு உட்பட்டு இருத்தல் வேண்டும். ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரையில் விளையாட்டே வாழ்க்கையாக கொள்ளமுடியாது. 
அவன் விளையாட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அவனது தீனுல்இஸ்லாத்தின்படி வாழ்வதற்கும் கொடுக்க வேண்டும்.

இன்றுள்ள விளையாட்டுகள் மேற்கினது கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகஅமைந்துள்ளது என்ற சிந்தனைத் தெளிவு ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டும். 
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டிலே மக்களால் குறிப்பாக இளைஞர்களால் அதிகமாக உச்சரிக்கப்படுகிற ஐந்து எழுத்து மந்திரச் சொல் எது என்று கேட்டால், கிரிக்கெட் என்று அடுத்த வினாடியே சொல்லிவிடுவார்கள். கிரிக்கெட் சம்பந்தமாக எழுதப்படாத பத்திரிக்கைள், காட்டப்படாத தொலைக்காட்சிகள், சொல்லப்படாத வானொலிகள் பாவம் செய்தவையாக மக்களால் எண்ணப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி , சாதி மத பேதமின்றி ஒன்றை ரசிக்கிறார்கள் என்றால் அது கிரிக்கெட் ஒன்றாகத்தான் இருக்கும். நாட்டு நடப்புகள் உலக விஷயங்கள் அரசியல் மற்றும் இஸ்லாம் பற்றிய விபரங்கள் பற்றி தெரியவில்லையா பரவாயில்லை! ஆனால் கிரிக்கெட் பற்றி புள்ளி விபரங்கள் ஒருவருக்குத் தெரியவில்லையெனில் அவர் அறிவீனராக கருதப்படுகிறார். அந்த அளவிற்கு கிரிக்கெட் எனும் போதை தலைவிரித்தாடுகிறது.
கிரிக்கெட் விளையாடக்கூடிய, பார்க்கக்கூடிய ஒருவர், (அது பகல் ஆட்டமாகவோ அல்லது இரவு ஆட்டமாக இருந்தாலும் சரியே) தொழுகையை விடுபவராக இருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டிருக்கும் ஒரு முஸ்லிம் ஐந்து நேரத் தொழுகையை கண்டிப்பாக ஐமாஅத்தோடு தொழக் கூடியவராக இருக்க முடியாது.
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப்படும்போது தொழுகையைப் பற்றித்தான் முதன்முதலாக விசாரிக்கப்படும் 
நூல்: அபூதாவூது

”பதினோரு முட்டாள்கள் விளையாடுவதைப் பலகோடி முட்டாள்கள் பார்க்கின்றார்கள்” என்று கிரிக்கெட் விளையாட்டைப்பற்றி சொன்னார் பெர்னாட்ஷா. 
விளையாட்டு இஸ்லாமிய வரைமுறைக்கு உட்பட்டு இருத்தல் வேண்டும் விளையாட்டில் மார்க்க நெறிப்படி விளையாடும் சில வீரர்கள் இருகிறார்கள் உதாரணம் சக்லைன் முஸ்தாக், ஹசிம் அம்லா, மொயின் அலி பொன்ற நபர்கள் தாடிகளுடன் விளையாடுகின்றனர் தொழுகை நேரத்தில் விளையாடும் பொழுது அதிக முறை தொழுகையை கடைப்பிடித்துள்ளானர். நோன்பு காலத்தில் தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஹசிம் ஆம்லா நோன்பை விடுவத்தில்லை பயிற்சி நேரத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் தொழுவதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். அதேபோன்று ஆப்கானிஸ்தான் வீரர்கள் மைதானத்தில் தொழுத காட்சியை நாம் அனைவரும் முகநூலில் பார்த்தோம். அதேபோல் நாமும் விளையாடினால் எந்த பிரச்சனையும் இல்லை
இந்த உலக மோகத்தை பற்றி அல்லாஹ் கூறுகிறான்
இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டும் தவிர வேறில்லை. மறுமை வாழ்வு தான் வாழ்வாகும். அவர்கள் அறியக் கூடாதா?
(குர் ஆன் 29.64)
Science 
இன்று பகுத்தறிவாளர்கள் இறைவன் என்பவன் இல்லை எல்லாம் அறிவியலும் இயற்கை தான் என்று கூறுகின்றனர்,அல்லாஹ்வுடைய புத்தகம் அல் குர் ஆன் ஒர் அறிவியல் புத்தகம். எல்லா அறிவியல் கோட்பாடுகளை கூறும் புத்தகம். சில உலக நியதி அல்லாஹ்வின் வல்லமைக்கு மாறாக இருக்கிறது என்று பல நாத்திகர்கள் மற்றும் பாசிஸ சிந்தனையாளார்கள் முன்வைக்கின்றனர். உதாரணம் நெருப்பின் தன்மை சுடுவது ஆனால் இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு குளிர்ந்ததாக மாறியது. கத்தியின் தன்மை எதையும் அறுப்பது ஆனால் அது இஸ்மாயில்(அலை) அவர்களின் கலுத்தை அருக்கவில்லை.
இதுபோன்ற சிந்தனைகளை உலக நியதியை வைத்து பார்க்கும் பொழுது அல்லாஹ்வின் வல்லமை இவர்களுக்கு தெரியாது. எல்லா அறிவியல் கோட்பாடுகள் அனைத்தும் அல் குர் ஆனில் இருக்கிறது உதாரணம்: bigbang theory, milky way, கிரகங்கள். சூரியன் சந்திரன் கருவூற்றல், சிலந்தி,எறுப்பு,கடல் போன்ற பல உண்மைகள் உள்ளது

--ஆரூர்.யூசுப்தீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக