Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 18 செப்டம்பர், 2014

சேது சமுத்திரத் திட்டத்தை ஒழித்துக்கட்ட மோடி அரசு முடிவு?

தமிழகத்தின் கனவுத்திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தைஎந்தவிதத்திலும் நிறைவேற்றுவதில்லை என்று நரேந்திரமோடி அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.“ராமர் பாலத்தை தகர்ப்பது என்றபேச்சுக்கே இடமில்லை” என்றுதிங்களன்று தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதன்மூலமாக, மத்தியகப்பல் போக்குவரத்து அமைச்சர்நிதின்கட்காரி இதை உறுதிப்படுத்தினார்.

மோடி அரசின் நூறு நாள் சாதனைகள் என்ற பெயரில் ஒவ்வொரு துறைஅமைச்சரும், சமீப நாட்களாகஅவ்வப்போது பேட்டியளித்து வருகின்றனர். இதனொரு பகுதியாக செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்காரி,சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தில் கடலுக்கு அடியில் உள்ள மணல் திட்டைஅகழ்ந்து எடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.கடலுக்கு அடியில் உள்ள மணல்திட்டை, ‘ராமர் பாலம்’என்று கூறிமதவாத சக்திகள், நீண்ட காலமாகமிக முக்கியத்துவம் வாய்ந்த சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் மத்தியில் பாஜக ஆட்சிஅமைந்த பிறகு, சேதுக் கால்வாய் கனவை முற்றிலும் தகர்க்கும் விதத்தில் கட்காரியின் பேட்டி அமைந்துள்ளது.இத்திட்டம் தொடர்பாக வேறுஏதேனும் மாற்று யோசனைகளை உருவாக்கித் தருமாறு ரயில் இந்தியா தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரச் சேவை(ரைட்ஸ்) எனும்அரசுபொதுத்துறை ஆலோசனை நிறுவனத்திடம் கேட்டிருப்பதாகவும், அந்தயோசனை வந்த பிறகுஅமைச்சரவையில் அதுகுறித்து பேசுவோம் என்றும் கட்காரி கூறினார். இது சேதுசமுத்திரத் திட்டத்தை முற்றிலும் கிடப்பில் போடுகிற ஏற்பாடே எனத் தெரிகிறது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக