Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 8 செப்டம்பர், 2014

இந்த படம் இந்துத்வாவாதிகளுக்கு சமர்ப்பணம்!


இந்த படம் இந்துத்வாவாதிகளுக்கு சமர்ப்பணம்!
சென்ற வருடம் டெல்லி விஞ்ஞான் பவனில் நல்லாசிரியர்களுக்கான விருது வழங்கப்பட்டது. விருதை ஜனாதிபதி பிரணப் முகர்ஜி வழங்கி கௌரவித்தார். பீஹார் மாநிலத்தை சேர்ந்த யாஸ்மின் என்ற இஸ்லாமிய சகோதரியும் 2012 ஆம் ஆண்டுக்கான விருதைப் பெற்றுக் கொண்டார். அவ்வாறு விருதை வழங்கும் போது ஜனாதிபதி சம்பிரதாயமாக கையெடுத்து கும்பிடுகிறார். விருதை வாங்கும் சகோதரி யாஸ்மின் இஸ்லாமிய மரபுபடி தனது கைகளை இதயத்தில் வைத்து அவருடைய அன்பை ஏற்றுக் கொள்கிறார். அவரவர் மத பண்பாடுகளை எந்த வெறுப்பும் இல்லாமல் கடைபிடிப்பது நமது பாரதத்தில் தொன்று தொட்டு நிலவி வரும் கலாசாரம். இது தான் மத சார்பற்ற இந்தியா!
ஜனாதிபதியே கையெடுத்து கும்பிடும் போது இவரும் கும்பிட வேண்டியது தானே என்று சில இந்துத்வாவாதியினர் கேட்கலாம். கையெடுத்து கும்பிடும் இந்த பழக்கமானது வெறும் சம்பிரதாயமாக முடிந்து விடுவதில்லை. மனிதனை தெய்வமாக மாற்றக் கூடிய வழமை வருவதற்கு முதல்படியே இந்த கையெடுத்து கும்பிடும் வழக்கம்தான். சுய மரியாதை உடைய ஒரு மனிதன் சக மனிதனை கடவுளாக நினைக்கவே மாட்டான். என்னதான் அவர்கள் மனித புனிதர்களாக இருந்தாலும் கடவுள் நிலையை மனிதன் அடையவே முடியாது.
மனிதப் புனிதர்களாக கருதப்பட்ட சாய்பாபா, நித்தியானந்தா, ஜெயேந்திரர் போன்றவர்களலெல்லாம் பாலியல் குற்றச்சாட்டில் சிக்குண்டு, அதை மறைக்க கொலை வரை கூட சென்றதை நாம் மறந்து விட முடியாது. சாதாரண மனிதர்களாகிய நமக்கு இருக்கும் சுய கட்டுப்பாடு கூட 'மனித தெய்வம்' என்று கூறக் கூடிய இவர்களிடம் இல்லாதது இவர்கள் என்றுமே கடவுளாக முடியாது என்பதை தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்து மத வேதங்களும் பழந் தமிழ் இலக்கியங்களும் இது போல் மனிதனை தெய்வமாக பூஜிக்க சொல்லவில்லை. இவை எல்லாம் பிற்காலத்தில் கலாசார மாற்றத்தினால் ஏற்பட்ட புதிய பழக்கங்கள் ஆகும்.
எனவேதான் நபிகள் நாயகம் தான் சபைக்கு வரும் போது தனக்காக யாரும் எழுந்து நிற்க வேண்டாம் என்று தடை செய்ததைப் பார்க்கிறோம். தனது காலில் யாரும் விழக் கூடாது என்று மனிதனுக்கு சுய மரியாதையை கற்றுத் தந்ததையும் பார்க்கிறோம்.
எங்கள் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று ஒருவர் நபிகள் நாயகம் அவர்களிடம் கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் அவர்கள் 'மனிதர்களே! இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள்! ஷைத்தான் உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். அல்லாஹ்வின் அடியானும், அவனது தூதருமாவேன். எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன்' என்றார்கள்.
நூல் : அஹ்மத் 12093
'அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறெதனையும் நான் பின்பற்றுவதில்லை' என்று முஹம்மதே! கூறுவீராக! 'குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?' என்று கேட்பீராக!
(திருக்குர்ஆன் 6:50)
'அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்' என்று முஹம்மதே! கூறுவீராக!
(திருக்குர்ஆன் 7:188)
குர்ஆனின் இந்த இரு வசனங்களும் நபிகள் நாயகமாக இருந்தாலும் அவர்களும் நம்மைப் போன்ற ஒரு மனிதர்தான். அவருக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு அவருக்கு வரும் இறை செய்திதான் என்பதை விளங்குகிறோம். எனவே மனிதர்களை மதிப்போம். அதே நேரம் அந்த மனிதர்களை கடவுள் நிலைக்கு உயர்த்தாமலும் இருப்போம்.!
Thanks by சுவனப் பிரியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக