Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 27 ஜனவரி, 2015

பழி இங்கே… பாவம் அங்கே!

பழி ஓரிடம், பாவம் ஓரிடம் என்று சொல்வார்களே… அதுபோன்றுதான் இன்று இந்திய முஸ்லிம்களின் நிலை ஆகி விட்டது. முஸ்லிம் பெயரில் இந்துத்துவா தீவிரவாதிகள் பல ஈனச் செயல்களைச் செய்து விட்டு பழியை முஸ்லிம்கள் மேல் போட்டு வருவது நாம் அறிந்ததே.
அவற்றை ஊடகங்களும் அப்படியே கக்குகின்றன. இதற்கு நாம் நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.
ஒரு சிலவற்றை உரிய ஆதாரங்களுடன் பார்ப்போம்.

1. ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் கொடியை ஏற்றிய போது கையும் களவுமாக பிடிபட்டனர்.
2. கொல்கத்தாவில் கடந்த மாதம் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் “ஜமாஅத்துல் முஜாஹிதீன் பங்களாதேஷ்” என்ற பெயரில் மேற்கு வங்கத்தில் குண்டு வைக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் விசாரணையில் மறுநாளே இந்தச் சுவரொட்டியை ஒட்டியது “அமைய்ய சர்க்கர்” என்ற இந்து என்று தெரிந்தது. (தி ஸ்டேட்மென் பத்திரிகை, டிசம்பர் 2, 2014)
3. அண்மையில் முஸஃபர் நகரை சேர்ந்த விஹச்பி பயங்கரவாதி  தேஷ்ரஜ் சிங் என்பவன் மூன்று கோவில்களுக்கு முன்பாக மாட்டுக் கறியை வீசியதற்காக கைது செய்யப்பட்டான். (22 டிசம்பர் 2014 NDTV)
4. அண்மையில் ராஜஸ்தானை சேர்ந்த 16 மந்திரிகளுக்கு “இந்தியன் முஜாஹிதீன்” என்ற பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து பெயர் தெரியாத இந்தியன் முஜாஹிதீன் காரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்ப்ட்டது. பின்னர் தீவிரவாத ஒழிப்புப் படை நடத்திய விசாரணையில் சுஷீல் சவுத்ரி என்ற இந்து இந்தியன் முஜாஹ்தீன் என்ற பெயரில் மின்னஞ்சல் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. (28 டிசம்பர் 2014, டைம்ஸ் ஆஃப் இந்தியா)
5. கடந்த மாதம் நடந்த பெங்களூரு குண்டுவெடிப்பில் அப்துல் கான் என்ற பெயரில் ட்விட்டர் கணக்கில் இருந்து, “நான்தான் குண்டு வைத்தேன். மேலும் குண்டுகள் வெடிக்கும்” என்று மிரட்டல் விடப்பட்டது. பின்னர் நடந்த விசாரணையில் அந்தக் கணக்கை கையாண்டது ஒரு இந்து மாணவன் என்று தெரிந்தது. (29 டிசம்பர் 2014, ஹிந்துஸ்தான் டைம்ஸ்).
இதில் இன்னொரு வேதனையான விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த ஐந்து வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட இந்துக்கள் மீது கடுமையான் வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
மாறாக, சில மணி நேர விசாரணைக்கு பின்னர் இவர்கள் அனைவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள், மனநலம் இல்லாதவர்கள் என்று காவல்துறையும் ஊடகங்களும் செய்தி வெளியிட்டு விடுதலை செய்யப்பட்டனர். (தகவல் : மார்க்கண்டேய கட்ஜு)
காந்தியை கொன்ற கொலைகாரன் கோட்சே தனது கையில் “இஸ்மாஈல்” என்று பச்சை குத்தி நாட்டில் கலவரத்தை உண்டு பண்ண ஆரம்பித்து வைத்த சதி இன்று வரை தொடர்கிறது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக