Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

சர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது!

இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்தி சுவரொட்டி தயாரித்து ஒட்டிய வழக்கில் ஈரோடு மாவட்ட இந்து முன்னணி செயலாளரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கடந்த வாரம் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்தும் வாசகங்களை கொண்ட சுவரொட்டிகள் ஈரோடு மாவட்ட இந்து முன்னணி
சார்பில் ஒட்டப்பட்டுள்ளதாக வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இஸ்லாமிய அமைப்பினர் சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் மனு அளித்தனர். மேலும் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பிலும், விடுதலை கட்சி சார்பிலும் தனித்தனியாக எஸ்.பி-யிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, எஸ்.பி-யின் உத்தரவின் பேரில், வீரப்பன் சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயன் தலைமையில் தனிப்படை அமைத்து, விசாரித்து வந்தனர். மேலும் இதுபற்றி சைபர் கிரைம் போலீசாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு கோட்டை காவலன் வீதியில் உள்ள ஒரு தனியார் அச்சகத்தின் கணினியில் சர்ச்சைக்குரிய சுவரொட்டியின் மாதிரி வடிவம் தயார் செய்து வைத்திருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக, அச்சகத்தின் உரிமையாளர் செந்தில்குமார் என்பவரிடம் விசாரித்ததில் ஈரோடு புறநகர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் பிரபுராம் தயாரிக்க சொன்னதாகவும், ஆனால் சுவரொட்டியில் உள்ள வாசகங்களை பார்த்து தான் அச்சிட மறுத்ததாகவும் தெரிவித்தார். மேலும், பிரபுராம் சுவரொட்டி தகவலை கணினியில் இருந்து தரவிறக்கம் செய்து வாங்கி கொண்டு போனதாகவும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பிரபுராமை சுவரொட்டி ஒட்டிய வழக்கில் கைது செய்து, ஈரோடு மாஜிஸ்திரேட் அருண் சபாபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். நாட்டில் இது போன்று மதகலவரன்களை தூண்ட நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கடுமையான தண்டனை வழங்க பாடல் வேண்டும்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக