Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 8 ஜனவரி, 2015

இலவச சப் இன்ஸ்பெக்டர் பரீட்சை பயிற்சி !


பயிற்சி நடைபெறும் இடம்: சென்னை,கோவை, திருச்சி, நெல்லை
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹ்வின் பேரருளால் பைதுல் முகத்தஸ் தலைமை இமாம் அவர்களின் புனித கரங்களால் கடந்த ஆண்டு துவக்கப்பட்ட ILMI தனது கல்விப்பணியில் வெற்றிப்பாதையில் பயணிப்பது தாங்கள் அறிந்ததே. அல்ஹம்துலில்லாஹ்.
ILMI நடத்தும் அழகிய கடன் IAS அகாடமி யின் முதல் மாணவர் அஷ்ரப் அனைத்து தேர்விலும் வெற்றி பெற்று தேர்வாகி தற்போது சிம்லாவில் பயிற்சியில் இருந்து வருகிறார்.
மேலும் மத்திய அரசின் உயர் பதவிகளுக்கான SSC தேர்வில் நமது அகாடமியின் மாணவர்கள் 7 பேர் தேர்வாகி வருமான வரித்துறை அதிகாரிகளாக சென்னையில் பணியில் அமர்ந்துள்ளனர்.
மேலும் TNPSC ன் குரூப் 2 தேர்வில் 22 பேர் தேர்வாகி அவர்களுக்கு தமிழக அரசின் கல்வித்துறை ,வருவாய் துறை ,வணிகவரி துறை ,மருத்துவ துறை போன்ற துறைகளில் தற்போது பணி ஒதுக்கீடு நடைபெற்று வருகிறது.இந்தத்தேர்வு எழுதிய 7 லட்சம் பேரில் நமது மாணவர் மீரா சாஹிப் 5 வது ரேங்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது . அல்ஹம்துலில்லாஹ்.
இந்த வெற்றிகள் அனைத்தும் அல்லாஹ்வின் அருளாலும் நமது சமுதாய நன்மக்களின் துஆ வினாலும் மட்டுமே கிடைத்தது என்பதை நாங்கள் மிக உறுதியாக நம்புகிறோம்.
சப் இன்ஸ்பெக்டர் தேர்வு 2015
எங்களின் சமூகப்பணியின் அடுத்த மைல்கல்லாக…….
தமிழக அரசின் காவல்துறைக்கு இவ்வாண்டு சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு 1000 பேர் எடுக்கவுள்ளனர்.காவல் துறையில் நமது சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் எவ்வளவு முக்கியதத்துவம் வாய்ந்தது என்பது தங்களை போன்ற சமூக அக்கறை உள்ளவர்களுக்கு தெரியும்.
சமீபத்தில் கோயமுத்தூர் கலவரம் தொடங்கி S.P .பட்டணம் லாக்கப் படுகொலை வரை காவல்துறை உட்பட பல்வேறு அரசு துறைகளில் நமது சமுதாயம் அலைக்கழிக்கப்படுவதும் அநீதமிழைக்கப்படுவதும் அதைக்கண்டு நம்மவர்கள் அங்காலாய்ப்பதும் வழமையாகி விட்டது .
இந்த கொடுமைகளில் இருந்து விடுபட அல்லாஹ் கொடுத்த அரிய வாய்ப்புதான் இந்த சப் இன்ஸ்பெக்டர் தேர்வு .இதற்கு முன் இது போன்ற ஆக்கப்பூர்வமான வாய்ப்புகளை நமது சமுதாயம் முறையாக பயன்படுத்தியிருந்தால் இப்போது நாம் அனுபவித்து வரும் இந்த அவல நிலை நமக்கு ஏற்பட்டிருக்காது .(குறிப்பாக இதற்கு முன் 2009 ல் இதுபோன்றுசப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு தேர்வு நடந்தபோது தேர்வான 1000 பேரில் 2 பேர் மட்டுமே முஸ்லிம்கள் என்பது வேதனையில்லையா ?)
இந்த வேதனைகளை களைவதற்கான உருப்படியான முயற்சிகளில் ஈடுபட ILMI களமிறங்கி உள்ளது .இந்த தேர்வில் பங்கு பெற தேவையான அணைத்து பயிற்சிகளோடு சேர்த்து நேர்மையான இறையச்சமுள்ள காவல் அதிகாரிகளாக செயல் படுவதற்கு தேவையான இஸ்லாமிய தர்பியத் பயிற்சிகளையும் நமது சமுதாய இளைஞர்களுக்கு இலவச மாக வழங்க ILMI முன்வந்துள்ளது .அதற்காக சென்னை ,கோவை, திருச்சி நெல்லை ஆகிய 4 நகரங்களில் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது.சுமார் 1000 முஸ்லிம் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து குறைந்தது 100 பேரை வெற்றி பெற வைப்பது எங்கள் இலக்காகும் .
இந்த இலக்கை இலகுவாக அடைய பள்ளிவாசல் முதவல்லி கள் ,கண்ணியத்திற்குரிய இமாம்கள்,சமுதாய அக்கறையுள்ளவர்கள் அனைவரும் துஆசெய்வதுடன் இந்த அவசர செய்தியை முஸ்லிம் இளைஞர்களுக்கு தெரிவித்து அவர்களை ஊக்கமூட்டி உடனடியாக பதிவு செய்ய வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.மிகக்குறுகிய கால அவகாசமே உள்ளது என்பதை நினைவுறுத்துகிறோம் .அல்லாஹ் நமது முயற்சிகளை இக்ஹ்லாசான முயற்சியாக்கி வெற்றியை தருவானாக ஆமீன் .

மேலும் விவரங்களுக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக