Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 1 ஜனவரி, 2015

சொஹ்ராபுத்தீன் போலி என்கவுண்டர் வழக்கு: அமித் ஷா விடுவிப்பு!

செராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் இருந்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா விடுவிக்கப்பட்டார்.
அவர் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்தது.
வழக்கு பின்னணி:
லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத
அமைப்புடன் தொடர்புள்ளவராக கருதப்படும் சொராபுதீன் ஷேக், அவரது மனைவி காசர்பீ ஆகியோர் குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்பு படையினரால் கடந்த 2005 நவம்பரில் கடத்திச் செல்லப் பட்டு, காந்திநகர் அருகே போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்.
என்கவுன்டரை நேரில் கண்டவர் துளசிராம் பிரஜாபதி. எனவே இவரும் குஜராத் போலீஸாரால் 2006 டிசம்பரில் கொல்லப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியது.
மேலும், இந்த 2 சம்பவங்கள் தொடர்பான சதி ஆலோசனையில் அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி எம்.பி.கொசாவி, “சொராபுதீன், துளசிராம் பிரஜபதி என்கவுன்டர் வழக்கில் சிபிஐ தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஏற்புடையதாக அல்ல. நான், அனைத்து ஆவணங்களையும் முழுமையாக ஆராய்ந்ததில் அமித் ஷா மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக தெரியவில்லை. எனவே குற்றவியல் நடவடிக்கைச் சட்டப் பிரிவு 227-ன் கீழ் அமித் ஷா இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார்” என்றார்.
சிபிஐ மேல்முறையீடு?
இந்நிலையில், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து சிபிஐ ஆலோசித்து வருவதாக தெரிகிறது. மும்பை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நகல் கிடைத்த பிறகு அதனை முழுமையாக ஆராய்ந்து அதன் பிறகு மேல்முறையீடு செய்ய சிபிஐ திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக