Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 12 பிப்ரவரி, 2015

அமெரிக்காவில் 3 இஸ்லாமிய மாணவர்கள் சுட்டுக்கொலை!

கரோலினா: அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள மேற்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் சிரியா நாட்டைச் சேர்ந்த தேஹா பராகத் (23) அவரது மனைவி யுசூர் முகமது (21), அவரது தங்கை ரசன் அபு சல்ஹா (19) ஆகியோர் படித்து வந்தனர்.
இவர்கள் 3 பேரும் பல்கலைக்கழக சாப்பல் ஹில் கட்டடத்தில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் க்ரேக் ஸ்டீஃபன் என்ற நபர் இவர்கள் மூன்று பேர் மீதும் செவ்வாய்க்கிழமை மாலை துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அந்த மூன்று பேரும் பலியாகினர்.
கரோலினா பகுதியில் நடந்த இந்த பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதனால் இந்த சம்பவம் மத வெறுப்புத் தன்மையால் ஏற்பட்டிருக்கலாம் என்ற வகையில் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இது குறித்து மேற்கு கேரோலினா பல்கலைக்கழக ஆசிரியர் கூறும்போது, “இந்த சம்பவம் நடந்தது எங்களுக்கு வருத்தம் அளிப்பதாக உள்ளது. அமெரிக்காவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான மனப்பான்மை நிகழ்வதும், சுட்டுக் கொல்லப்பட்ட நபர்கள் இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் இதனை பல்வேறு கோணத்தில் அணுக வேண்டியுள்ளது. பலியான மூன்று மாணவர்களும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கியவர்களாக இருந்தனர். இதனை அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுப்பட்ட க்ரேக் ஸ்டீஃபன் தானாக முன்வந்து போலீஸாரிடம் சரணடைந்துள்ளார். இவர் தன்னை ஒரு நாத்திகர் என்று அறிமுகப்படுத்திக்ககொண்டார். சரணடைந்த க்ரேக் ஸ்டீஃபனின் ஃபேஸ்புக் பக்கத்தின் அட்டைப் புகைப்படத்தில் ‘சமத்துவத்துக்கான நாத்திகர்கள்’என்ற புகைப்படம் உள்ளது. மேலும் அவரது நிலைப் பகிர்வுகள் அனைத்தும் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானதாகவும் விமர்சிக்கும் வகையிலும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தூது ஆன்லைன் 
மற்றும் http://www.countercurrents.org/mem110215.htm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக