Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 4 பிப்ரவரி, 2015

நல்ல நாள் மோடிக்கு மட்டுமே! – குஷ்பு விமர்சனம்


டெல்லி  : கருப்புப் பணத்தை மீட்டெடுப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ரூ.10 லட்சத்துக்கு சூட் அணிவதா? என டெல்லி பிரச்சாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு விமர்சித்துள்ளார்.

டெல்லி ராஜீந்தர் நகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரம் யாதவை ஆதரித்து குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் குஷ்பு பேசும்போது, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் முடங்கிக் கிடக்கும் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவந்து, அதிலிருந்து சராசரியாக ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் பணம் போடப்படும் என கூறியிருந்தார். ஆனால், இதுவரை ஒரு ரூபாய்கூட வந்தபாடில்லை. ஆனால், பிரதமர் மோடியோ ரூ.10 லட்சத்திக்கு சூட் அணிந்து கொள்கிறார். அவர் உறுதியளித்த நல்ல நாள் வந்துவிட்டது. ஆனால், அது அவருக்கு மட்டுமே” என பேசினார்.
ராஜீந்தர் நகர் தொகுதியில் தமிழர்கள், கன்னட மக்கள் அதிகம் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தூது ஆன்லைன்

1 கருத்து: