Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 23 ஜூன், 2014

பென்னகோணத்தில் ரூ.2 கோடியில்புதிய துணை மின் நிலையம்

பெரம்பலூர் மாவட்டம், பென்னகோணத்தில், 2 கோடி ரூபாய் மதிப்பில், புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் அறிவித்தபடி,
பெரம்பலூர் மாவட்டம், பென்னகோணம் துணை மின் நிலைய திட்டத்திற்கு, இரண்டு கோடியே, 52 லட்சத்து, 17 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்காக, இரண்டு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த துணை மின்நிலையத்தில், உயர் அழுத்த மின்மாற்றி நிறுவப்பட்டுள்ளது. திருமாந்துறை, அத்தியூர், பெருமத்தூர், வடக்கலூர் மின்பாதைகள் மூலம் மின்சாரம் வினியோகம் செய்யப்பட உள்ளது.இந்த துணை மின் நிலையம் மூலம் லெப்பைக்குடிகாடு, பென்னகோணம், அத்தியூர், ரெட்டிகுடிகாடு, திருமாந்துறை, கழனிவாசல், வடக்கலூர், அகரம்சிகூர், எஸ்.ஆடுதுறை, பெருமத்தூர், சாத்தநத்தம் பகுதிகளுக்கு சீரான மின்சாரம் வழங்கப்படுவதுடன், மங்களமேடு, கீழப்பெரம்பலூர் துணை மின் நிலையங்களில் மின் பளு குறைக்கப்படும்.மேலும், இந்த திட்டத்தால், ஒரு ஆண்டுக்கு, 8.6 லட்சம் யூனிட் மின் இழப்பு தவிர்க்கப்படுவதால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு, 32 லட்சத்து, 16 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்க உள்ளது. இந்த திட்டத்தால், 10 ஆயிரம் மின்நுகர்வோருக்கு சீரான மின் வினியோகம் செய்யப்பட உள்ளது.

நன்றி தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக