Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 6 ஜூன், 2014

பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தக் கோரும் மனு தள்ளுபடி!

இந்தியா முழுவதும் பொது சிவில் சட்டத்தை கால நிர்ணயம் செய்து அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக மூல்சந்த் குசேரியா என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவை பரிசீலித்த தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி. ரோஹிணி, நீதிபதி ஆஸ்.எஸ். என்ட்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, “நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஏற்கெனவே அளித்துள்ள தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ஆலோசனை தெரிவித்திருந்தாலும், இந்த வழக்கில் மனுதாரர் குறிப்பிடுவதைப்போல், அந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிடவில்லை.
மேலும், குறிப்பிட்ட சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ஆகையால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.” என்று உத்தரவிட்டனர்.
மூல்சந்த் குசேரியா தாக்கல் செய்திருந்த மனுவில், “1995ஆம் ஆண்டு ‘சரளா முத்கல்’ வழக்கில், நாடு முழுவதும் மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. பொது சிவில் சட்டத்தை காலநிர்ணயம் செய்து நிறைவேற்ற மத தலைவர்கள் அல்லது நிபுணர்கள் அடங்கிய குழுக்களை அமைக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
நன்றி நியூஇந்தியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக