Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 26 ஜூன், 2014

வேண்டாம் நமக்கு பதவி மோகம்!


மறுமையின் அந்த வீடாகிறது- பூமியில் அகம்பாவத்தையும், குழப்பத்தையும் நாடாதவர்களுக்கே அதை நாம்(சொந்தமாக)ஆக்கிவிடுவோம். இன்னும் (நல்ல)முடிவு பயபக்தியுடையவர்களுக்குத்தான்!(அல்குர் ஆன் 28-83)

என்னருமை சமுதாயமே! மேலே கூறப்பட்டுள்ள இறைவசனம், யார் ஒரு விசயத்தில் பொறுப்பேற்றுக்கொண்டு அதில் இறையச்சம் இல்லாமல் அகம்பாவத்திலும் அறியாமையிலும் அந்த பொறுப்புக்கு தகுதி இல்லாமல் ஆகிவிடுகிறாரோ? அவருக்கு மறுமை நாள் மிகப்பெரிய சோதனையாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
ஹஜ்ரத் அபூதர்(ரலி)கூறுகிறார்கள்: நான் யாரஸூலல்லாஹ்!தாங்கள் என்னை (ஏதாவதொரு பகுதிக்கு)ஆட்சிப்பதவியில் நியமனம் செய்யக்கூடாதா? என்று கேட்டேன்.
அதற்கு நபியவர்கள் தங்கள் கரத்தால் என் தோள்பட்டையில் அடித்துவிட்டு ஓ அபூதரே! நிச்சயமாக ஆட்சிப்பதவி என்பது ஓர் அமானிதம் (நம்பிக்கைக்குரிய பொறுப்பு) ஆகும். உலகில் அதற்கு அதிக மதிப்பு இருந்தபோதிலும் கியாமத் நாளில் அது இழிவும், கைசேதமும் ஆகும்; யார் பொறுப்பினை சுமந்து அதன் கடமையை சரிவர நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்குத்தவிர. (முஸ்லிம்)
என்னருமை மக்களே, மேலே கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ள ஆட்சிப்பதவி என்பது ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், அமைச்சர், எம்பி, எம்.எல்.ஏ என்பது மட்டுமல்ல. அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளை நிர்வகிக்க தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளுக்கும் பொருந்தும்!
இன்றைய காலத்து ஜமாத்து பொறுப்பாளர்களின் நிலை என்ன? தொழாதவர்கள், மார்க்கம் தெரியாதவர்கள், பொறுமை இல்லாதவர்கள், இறையச்சம் இல்லாதவர்கள், மார்க்கச் சட்டம் தெரியாதவர்கள் எல்லாம் ஜமாத்துகளின் தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர்களாக ஆகிவிடுகிறார்கள்.
இதைவிட பெரியக்கொடுமை பணம் இருந்தால் போதும் வட்டி தொழில் செய்பவர்கள், குடிகாரர்கள் கூட ஜமாத் பொறுப்புக்கு வந்துவிடுகின்றனர்.
இதுபோன்றவர்களுக்காக நமதருமை நாயகம்(ஸல்)அவர்கள் கூறியுள்ள ஹதீஸை பாருங்கள்,
அண்ணல் நபி (ஸல்)அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்: தோழர்களே!வருங்காலத்தில் நீங்கள் தலைமைப்பதவியை ஆசைப்படுவீர்கள்! ஆனால் அது கியாமத் நாளின் கைசேதமாகும்.(புகாரி)
தலைமைப்பதவியில் இருந்தபோது தானும், தன் நிர்வாகமும் செய்த எல்லாக்காரியங்களுக்கும் கியாமத் நாளில் அல்லாஹ்வின் சமூகத்தில் பதில் சொல்லவேண்டியது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியமாகிவிடும். அந்தக்கஷ்டமான சூழ்நிலையில் நாம் ஏன் இந்தப்பதவியை வகித்தோம்? என மனிதன் கைசேதப்படுவான்,கவலைப்படுவான். ஆகவே பதவியை ஆசைப்படாதீர்கள் என்பதை தான் மேலே சொல்லப்பட்டுள்ள ஹதீஸ் நமக்கு எச்சரிக்கிறது.
என்னருமை சமுதாயமே! இனிவரும் காலங்களிலாவது அல்லாஹ்வின் வீடுகளை நிர்வகிக்கும் பொறுப்புகளை ஐந்து நேரத்தொழுகைகளை சரிவர நிறைவேற்றக்கூடியவர்கள், இறையச்சமுடையவர்களிடம் ஒப்படைக்கும் சூழலை உருவாக்குவோம், நாளை மறுமையின் வீட்டை நமதாக்குவோம் !
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக