Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 8 ஜூன், 2014

முஸ்லிம் வேட்டை: அரசின் மவுனம் கெட்ட அறிகுறி – மஜ்லிஸே முஷாவரா!

புதுடெல்லி: இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து அரசும், பொது சமூகமும் கடைப்பிடிக்கும் மவுனம் கெட்ட செய்திக்கான அறிகுறி என்று ஆல் இந்தியா மஜ்லிஸே முஷாவரா தலைவர் டாக்டர் ஸஃபருல் இஸ்லாம் கான் தெரிவித்தார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் துவங்கியுள்ளது.புனேயில் ஐ.டி அதிகாரி முஹ்ஸின் ஸாதிக்கை இந்துத்துவவாதிகள் கொலைச் செய்த சம்பவத்தை ஊடகங்களோ, மத்திய-மாநில அரசுகளோ, பொது மக்களோ ஒரு பொருட்டாக கருதவில்லை.இது முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை பொது சமூகம் எவ்வளவு அற்பமாக கருதுகிறது என்பதை நிரூபிக்கிறது.பா.ஜ.க அரசுக்கு உதவுவதே இந்த அணுகுமுறை.
பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் சுதந்திரமாக சுற்றி திரியும்போது அவர்களை கைதுச் செய்ய அரசு முயற்சிக்கவில்லை.தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இழப்பீடு வழங்க கூட முடியாத நிலைமை.ஆனால், இதுபோன்ற சம்பவங்களில்  உதவிகளை வழங்க மத்திய -மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் போட்டியிடுகின்றன.சிறுபான்மை மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பாதுகாப்பே ஒரு அரசை மதிப்பீடுச் செயவதற்கான அளவுகோல்.
சிறுபான்மையினரை அடக்கி ஒடுக்குவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாக நம்பும் இந்துத்துவாவினரை திருப்திப்படுத்தவும், சிறுபான்மையினரை மிரட்டவும் செய்யும் பா.ஜ.க அரசை நாடும், உலகமும் மதிப்பீடுச் செய்யத்தான் வேண்டும்.இவ்வாறு ஸஃபருல் இஸ்லாம் கான் தெரிவித்தார்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக