Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 8 ஜூன், 2014

எண்ணங்களை போன்றே வாழ்வு ! வாழ்த்துக்கள் புஷ்ரா ...

புஷ்ரா நல அறக்கட்டளை லப்பைகுடிகாட்டிலும் ( நமதூரில் ) தமது சேவையை துவங்கியுள்ளது.
அஸ்ஸலாமு அலைக்கும்

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.(3:130)
நமது அறக்கட்டளை கடந்த 16 ஆண்டுகளாக வி.களத்தூரில் நகைக்கடன் திட்டம் செயல்பட்டு வந்தது. கடந்த 2 ஆணடுகளாக வியாபாரிகள் கடண் திட்டம் அமுல் படுத்தி வியாபாரிகள் வட்டியிலிருந்து மீள பெரும் உதவியாக இருந்து வருகிறது. கடன் தொகையை 10 மாதம் தவனையாக செலுத்தி பயன் பெற்றுவருகிறார்கள்.
வி.களத்தூர் மக்கள் மட்டுமே பயன் பெற்று வரும் இந்த சூந்நிலையில் நமது தொப்புள்கொடி உறவான லப்பைகுடிகாடு மக்களும் இந்த வட்டியிலிருந்து மீண்டு இலகுவாக வட்டியில்லா கடன் பெற வேண்டு என்ற நல்ல நோக்கத்துடன் நமக்கு நாமே உதவித்திட்டம், சிறு தொழில்உதவித்திட்டம், சிறு சேமிப்பு திட்டம், புஷ்ரா வைப்புத்தொகைத்திட்டத்தையும் கடந்த மே மாதம் முதல் ஆரம்பித்து உள்ளோம். என்பதை மகிழ்ச்சியுடன்  தெரிவித்து கொள்கிறோம்.
இது போன்று இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டு இருதிக்குள் பெரம்பலூர் மற்றும்  திருச்சியிலும் கிளைகளை ஆரம்பித்து நமது சகோதரர்கள் வட்டியில்லாமல் வியாபரத்தை பெருக்க நமது அறக்கட்டளை பெரும் உதவியாக இருக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால், விரைவில் தமிழ் நாடு முழுவதிலும் இது போன்று கிளைகள் ஆரம்பித்து வட்டியில்லா கடன் திட்டத்தை விரிவு படுத்த நாடியுள்ளோம் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
அறக்கட்டளையின் சேவைகள்
1. வட்டியில்லா நகை கடன் திட்டம்
2. பொது சேவை திட்டம்
3. நமக்கு நாமே உதவித்திட்டம் 
4.  கல்வி உதவித்திட்டம்
5.  சிறு சேமிப்புத்திட்டம்
6.  திருமண உதவித்திட்டம்.
7.  மருத்துவ உதவித்திட்டம்.
8.  சிறு தொழில் உதவித்திட்டம்.
9.  புஷ்ரா வைப்புத்தொகை திட்டம்
10.புஷ்ரா முதலிட்டுத்திட்டம்

மேற்கண்டத்திட்டத்தில் அனைவர்களும் பயன் அடையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நமது அறக்கட்டளை முதலிட்டுத்தின் மூலம் ஜீன் மாதம் முதல் புதியதொரு வியாபாரத்தை ஆரம்பிக்க உள்ளோம் இதில் தாங்களும் இனைந்து முதலிடு செய்ய விரும்புவர்கள் பொதுச்செயளாலர் அப்துல் சலாம் 055-1153584 அவர்களை தொடர்புக்கொண்டு தங்களின் முதலிடுகளை அதிகரித்து கொள்ளுமாறு அன்புடன் அலைக்கின்றோம்.
நமது அறக்கட்டளை விரிவுபடுத்திக்கொண்டு இருக்கும் சூழ்நிலையில் வட்டியில்லா கடனத்திட்டத்திற்கு போதிய நிதி இல்லை, எனவே உங்களால் முடிந்தளவு அறக்கட்டளையில் வைப்பு தொகையாக செலுத்தினால் இன்னும் பல நபர்கள் வட்டியிலிருந்து மீண்டு வருவார்கள் .தாங்கள் செலுத்தும் வைப்தொகையால் பல நபர்கள் பயன் அடைவார்கள். குறைந்தபட்சம் வைப்புத்தொகையானது ரூ5000.00 ஐந்து ஆயிரம் மட்டுமே. இத்திட்டத்தில் இனைந்து நன்மையை அல்லிகொள்ளுங்கள்.
”ஆதவுமின் மகனே! உன் தேவை போக நீ செலவு செய்வது உனக்கு சிறந்ததாகும் அதை நீ செலவு செய்யாமல் இருப்பது உனக்கு தீங்காகும். தேவையானவற்றை வைத்துக் கொள்வதற்காக நீ பழித்துரைக்கப்ட மாட்டாய். உன் நிர்வாகத்தின் கீழ் இருப்போருக்கு (நீ உதவி செய்து) செலவைத் துவக்குவாயாக! என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுஉமாமர் (ரலி) நூல்:(திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:510)
இந்த நபிமொழிகளை நன்றாக மனதில் பதிய வைத்து நமது செல்வத்தின் நிலையையும், வாழ்வின் நிலையையும் சரி செய்து மறுமையில் வெற்றி அடைய முயற்சிகள் செய்யவேண்டும். வல்ல அல்லாஹ் நமக்கு எல்லா காரிஙங்களிலும் நன்மையை தந்து ஹாலல், ஹராமை பேணி நடக்கும் நன்மக்களாக நாம் வாழ்வதற்கு நல்லாருள் புரியட்டும்.
நமது அறக்கட்டளைக்கு உங்களின் ஆலோசனைகளும் துஆக்களையும் எண்றென்றும் நோக்குகின்றோம்
                  உங்கள் தேவையே!!     எங்கள் சேவை!!
அன்புடன்
தலைவர்
M.அப்துல்லா பாஷா (துபை 050-3878421)
M.அன்சர் பாஷா (வி.களத்தூர் 9585358592)
Vkr.bct@gmail.combct.vkr@gmail.com, www.bushracaretrust.com

மின்னஞ்சல் மூலமாக
புஷ்ரா நல அறக்கட்டளை

2 கருத்துகள்:

  1. இது போன்ற நல்ல வாய்ப்புகள் கிடைப்பதில்லை, கிடைத்த சந்தரப்பத்தை நாம் முழுமையாக பயன்படுத்தி வட்டியிலிருந்து மீண்டு வருவதற்கு இந்த நல்லத்திட்டத்தை ஆரம்பித்த வி.களத்தூர் புஷ்ரா நல அறகட்டளையை நாம் மனதார பாரட்டத்தான் வேண்டும் அவர்களின் முயற்சியை இறைவன் வெற்றியடைய செய்ய நாம் அனைவர்களும் துஅ செய்வதோடு நிருத்திவிடாமல் இத்திட்டத்தில் அனைவர்களும் பயன்பெறுவோம் .

    குறிப்பாக RD சிறு சேமிப்புத்திட்டம் மிக அருமையான திட்டம் இதில் பெரும்பாலும் பென்களே பயன் படுத்துகிறார்கள், புஷ்ராவே நம் இல்லத்தை தேடி வருகிறார்கள் என்பது மிகவும் சந்தோசம். இதில் உங்கள் வீட்டு பென்ங்களை வங்கிக்கு சென்று RD சேமித்து அதில் வரும் வட்டியை நாம் பயன் படுத்துவதை தவிர்த்து. இத்திட்டத்தில் இனைந்து வட்டியில்லாமல் பயன் அடைமாறு செய்யுங்கள்

    இறைவன் அனைவருகளுடைய பாவங்களையும் மன்னித்து நேர்வழியில் செலுத்த கிருபை செய்வானாக!!!

    பதிலளிநீக்கு
  2. மாஷா அல்லாஹ்!

    புஷ்ரா அறக்கட்டளை சகோதரர்களுக்கு எமது நன்றிகள்!
    ஜஜாகல்லாஹ் கைரன்!

    தங்களுடைய பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!
    எல்லாம் வல்ல அல்லாஹ் அஜ்ஜ வஜலின் உதவி துணைநிற்கட்டுமாக!
    ஆமீன்

    பதிலளிநீக்கு