Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 20 மே, 2015

கடமை எங்கிருக்கிறதோ அங்கு அறிவும் இருக்கும் ....


நெருப்பு கங்குகளைக் கொட்டுவது போலசூரியன் வெப்பக் கதிர்களை செலுத்திக் கொண்டிருந்தான். அதனால் பாலைப் பெருவெளி அனலாய் தகித்தது. சிதறிய வர்ணம் போல ஆங்காங்கே பச்சையும் சாம்பலுமாய் புற்களும்புதர்களும் முளைத்திருந்தன. மேய்ச்சலுக்கு அவற்றைத் தேடிச் சென்ற ஆடுகள் வெப்பமிகுதியால் மேலோட்டமாய் மேய்ந்தன. பிறகு அடுத்த புல்பரப்புக்கு அவசரம்... அவசரமாய் விரைந்தன.

ஆட்டு மந்தையை ஒரு சிறுவன் காவல் காத்துக் கொண்டிருந்தான். அவன் அமர்ந்திருந்த பாறையிலும் வெப்பம் கசிந்தது. அவனது பார்வை ஆட்டு மந்தையிலேயே இலயித்திருந்தது. ஓர் ஆடு காணாமல் போனாலும் அதன் உரிமையாளருக்கு பதில் சொல்லியாக வேண்டுமே! மந்தையிலிருந்து பிரிந்து செல்லும் ஆடுகளை விரட்டுவதும்ஒன்று சேர்ப்பதுமாய் அவன் இருந்தான். கொஞ்சம் அசந்தாலும் ஓநாய் கவ்விச் சென்றுவிடும். தீவிரமான கண்காணிப்பின் காரணமாக வேறு சிந்தனையேதும் மனதில் எழவில்லை.

இன்னும் சிறிது நேரத்தில் ஆட்டு மந்தையை நீர் நிலைக்கு ஓட்டிச் செல்ல வேண்டியிருக்கும். பாவம்! தாகம் தணித்துக் கொள்ளட்டுமே அந்த வாயில்லா பிராணிகள்.
பார்வையும் கவனமும் ஆட்டு மந்தையில் லயித்திருந்த அந்த நேரத்தில்தான், “தம்பி!” என்ற குரல் கேட்டது.
சிந்தனையிலிருந்து விடுபட்டுத் திரும்பியவனுக்கு பாறையின் மறுபக்கம் இருவர் நிற்பது தெரிந்தது. இருவரின் முகங்களிலும் களைப்பு வெளிப்பட்டது. அவர்கள் நெடுந் தொலைவு நடந்து வருகிறார்கள் போலும்! அந்த வழிப் போக்கர்கள் அருந்துவதற்கு நீராவது தரலாம் என்று நினைத்து தோல்பையை எடுத்தவன் அதில் நீர் இல்லாமலிருப்பதைக் கண்டான். உதடுகளை பிதுக்கிக் கொண்டான். பெரியோரின் தாகம் தணிக்கவும் இயலாத துரதிஷ்டசாலியாகி விட்டேனே!” என்று முணுமுணுத்துக் கொண்டான்.
நிலைமையை வந்தவர்கள் புரிந்து கொண்டார்கள். பரவாயில்லை தம்பி!” என்று சமாதானமும் சொன்னார்கள். அவர்களில் ஒருவர் கேட்டார்: தம்பி! தாகம் உயிரைப் பறிக்கிறது. ஆட்டுப் பாலையாவது கறந்து குடிக்கிறோம். அதற்கு கொஞ்சம் அனுமதியேன்!
வழிப்போக்கர்களின் நிலைமை சிறுவனை பெரிதும் வருத்தியது. அவர்களுக்கு உதவி செய்ய மனம் துடித்தது. ஆனால் இதை எப்படி அனுமதிப்பதுஎஜமானரின் அனுமதியில்லாமல் ஆட்டுப்பால் கறக்க முடியாதே! சிறுவன் சங்கடத்துடன் தனது நிலையை வெளிப்படுத்தினான். பெரியவர்களே! மன்னிக்க வேண்டும்! ஆட்டின் உரிமையாளர் அனுமதியின்றி பால் கறக்க இயலாது. உங்களுக்கு உதவி செய்ய முடியாமைக்கு மன்னிக்க வேண்டும்!
உரிமையாளர் தான் இங்கே இல்லையே தம்பி! பால் கறப்பதை அவர் பார்க்கவா போகிறார்?”
சட்டென்று நிமிர்ந்து நின்ற சிறுவனிடமிருந்து பளிச்சென்று பதில் வந்தது: உண்மைதானய்யா! ஆட்டு உரிமையாளர் இங்கில்லைஅவர் பார்க்கவும் முடியாது என்பது உண்மைதான்! ஆனால்எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்றானே! நான் இந்தத் தவறை எப்படிச் செய்வேன்?”
சிறுவனின் தெளிவான பதிலைக் கேட்டதும் வழிப் போக்கர்களின் முகத்தில் புன்முறுவல் இழையோடியது. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கண்களால் ஏதோ சாடையாகச் சொல்லி தலையாட்டினர்.
கடைசியில்இருவரில் ஒருவர் சொன்னார்: சரி! போகட்டும் தம்பி! குட்டிப் போடாத ஆட்டிலிருந்து பால்கறந்து குடிப்பதில் உனக்கு ஆட்சேபணை இல்லையே!
என்னகுட்டிப் போடாத ஆட்டிலிருந்து பால்கறப்பதாநடக்குமா இதுஅப்படி நடக்குமானால்… எனக்கேதும் ஆட்சேபணையில்லை!
வியப்பும் திகைப்புமாய் ஓர் ஆட்டை சிறுவன் பிடித்து வந்தான்.
வழிப் போக்கரில் ஒருவர் கண்களை மூடி பிரார்த்தித்தார். ஆட்டின் மடியில் கைவைத்தார். என்ன விந்தை! மடி பெருத்து பால் சுரக்கலாயிற்று. இருவரும் பாலை கறந்து வயிறு நிரம்பக் குடித்தனர். சிறுவனுக்கும் கொடுத்தனர். திரும்பவும் ஏதோ சொல்லி பிரார்த்திக்க பால் மடி பழையபடி வற்றிவிட்டது.
நடப்பதை நம்ப முடியாத விழிகளுடன் சிறுவன் பார்த்தான். சற்று நேரத்தில் வந்தவர்கள் யார் என்று அடையாளம் கண்டு கொண்டான். அவர்களைத் தேடிச் சென்று பணிவோடு சொன்னான்: இறைவனின்தூதரே! நான் தங்கள் திருச்சமூகத்தில் இருந்து எப்போதும் பணிவிடை செய்ய விரும்புகின்றேன். அதுபோலவே,தங்களோடு தங்கியிருந்து கல்வி அறிவு பெறவும் ஆசைப்படுகின்றேன். தாங்கள் இதற்கு அனுமதி தரவேண்டும்!
மகனே! அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்! தாராளமாக இருக்கலாம். நீர் கல்வி அறிவுகளில் சிறந்து விளங்குவீர் என்பதில் சந்தேகமேயில்லை! ஏனென்றால் கடமை தவறாத உணர்வு எங்கிருக்கிறதோ அங்கு அறிவும் தங்கு தடையின்றி இருக்கும்!” என்று நபிகளார் அந்த சிறுவரைக் கட்டியணைத்து வாழ்த்தினார். பின்னாளில் புகழ் வாய்ந்த நபித்தோழராக வளர்ந்த அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊதை தம்முடன் இருக்க அனுமதியும் தந்தார். பக்கத்திலிருந்த நபித்தோழர் அபூபக்கரும் அதை ஆமோதிப்பதைப்போல தலையசைத்தார்.

மின்னஞ்சல் மூலமாக
Basha Haja Mohideen

1 கருத்து:

  1. பெயரில்லா24 மே, 2015 அன்று AM 7:14

    அஸ்ஸலாமு அலைக்கும் ஒரு அன்பான வேண்டுகோல் நமதூரில்கடந்த வெள்ளிக்கிழமை புதிய நிர்வாகம் தேர்ந்து எடுக்கப்பட்டது அதைப்பற்றி நமதூர் செய்தியில் ஒன்றும் போடவில்லை (நீங்கள் போடமாட்டீர்) அதனால் நமதூர் செய்தி பெயரை மாற்றி இன்று முதல் TNTJ NEWS என்று பெயர் மாற்றம் செய்வீர்கள் என்று நம்பும் லப்பைகுடிகாட்டான்

    பதிலளிநீக்கு