Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 21 மே, 2015

'மன்னிக்கவும், முஸ்லிம்களை நாங்கள் பணியமர்த்துவதில்லை'

'மன்னிக்கவும் முஸ்லிம்களை நாங்கள் பணியமர்த்துவதில்லை'. பிரபல வைர வியாபார நிறுவனத்தில் வேலைக்கு விண்ணபித்தவருக்கு அந்நிறுவனம் அனுப்பிய ஒற்றை வரி பதில்தான் இது.

"என்னை பணியமர்த்த வேண்டாம் என அவர்கள் நினைத்திருந்தால், அதற்கு அவர்கள் வேறு ஏதாவது பதில் சொல்லியிருக்கலாம்" என கூறுகிறார் பாதிக்கப்பட்ட ஜெசான் அலி கான்.
ஜெசான் அலி கான், ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் அண்மையில் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் நிறுவனத்தில் பணியில் சேர விண்ணப்பித்திருக்கிறார்.


இவருடன் சேர்ந்து இவரது நண்பர்கள் பலரும் விண்ணப்பித்திருக்கின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு பணியும் உறுதியாகிவிட்டது. ஆனால், ஜெசானின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
அது குறித்து அவர் நம்மிடம் ( தி இந்து - ஆங்கிலம் ) கூறும்போது, "எனது நண்பர்களுடன் இணைந்து ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்தேன். அடுத்த 20-வது நிமிடத்தில் எனக்கு மின்னஞ்சலில் பதில் வந்தது. அதில், "உங்கள் விண்ணப்பத்துக்கு நன்றி. மன்னிக்கவும் முஸ்லிம்களை நாங்கள் பணியமர்த்துவதில்லை" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதைப் படித்துவிட்டு நான் அதிர்ந்து போனேன். என்னை பணியமர்த்த வேண்டாம் என அவர்கள் நினைத்திருந்தால், அதற்கு அவர்கள் வேறு ஏதாவது பதில் சொல்லியிருக்கலாம்" என்றார்.
ஜெசான் தனது மன வருத்தத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்ய, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை சமூக வலைத்தளவாசிகள் சரமாரி வசை பாடினர். இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை தலைவர் மகேந்திரா எஸ்.தேஷ்முக், வருத்தம் தெரிவித்து ஜெசானுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அக்கடிதத்தில், "பாலினம், மதம், ஜாதி அடிப்படையில் மனிதர்களிடம் எங்கள் நிறுவனம் பாகுபாடு பார்ப்பதில்லை என்பதை தெளிவுபடுத்து விரும்புகிறேன். உங்களுக்கு ஏதாவது மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், குறிப்பிட்ட அந்த மின்னஞ்சலை எங்கள் நிறுவனத்தில் பயிற்சியாளாராக இருக்கும் தீபிகா டிகேவால் தவறுதலாக அனுப்பப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக