Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 26 ஜூலை, 2014

துபாயில் ரமலான் 27 ....


அமீரகத்தில் நேற்று ரமலானின் 27-ஆம் கிழமை புனித லைலத்துல் கத்ர் இரவு  சுன்னத்துவல் ஜமாத் பிரகாரம் (இறையருள் வார்க்கும் மகத்தான இரவு) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 


தேரா துபையின் கோட்டைப் பள்ளியில் இஸ்லாமிய தமிழுலகம் அறிந்த மார்க்க அறிஞர் பெங்களூர் ரஷாதியா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் அல்ஹாஜ் மவ்லவி சைஃபுத்தீன் ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். உரையில் லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பை திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் வெளிச்சத்தில் அழகுற எடுத்தியம்பினார்கள்.

உரையில் இன்றைய தினங்களில் கத்ருடைய இரவு குறித்து பற்பல சந்தேங்களை எழுப்பி சமுதாயத்தை சிலர் குழப்பி வரும் நிலையை சுட்டிக்காட்டி இது அந்நாளை இச்சமூகம் பெற்று பயனெய்திடக்கூடாது என்பதின் உள்நோக்கமுடையோர் செய்யும் குதர்க்க வேலை என்றும் கத்ருடைய இரவு என்பது 27ம் கிழமை தான் என்பதற்கு புகாரி சரீபின் நபிமொழிகளையும், சஹாபாக்களது வாழ்வியல் சம்பவங்களையும் அடுக்கடுக்காய் சொல்லிக்காட்டி இன்றைய இரவை பயன்படுத்தி செம்மை பெறுங்கள்.. எல்லோரும் வெறுப்புணர்வு இல்லாமல் அன்பு பாராட்டி குறிப்பாக தாய், தந்தையரின் அன்பை பெற்று, இல்லாதவருக்கு உதவி மனநிறைவை பெற்று இன்றைய இரவில் மனத்தூய்மையோடும், பயபக்தியோடும் நல்லறம் செய்தால் இறைவன் வாக்களித்த சிறப்பை தருவான். நீங்கள் என்னென்ன வேண்டுகிறீர்களோ அவைகளை உங்களுக்கு நன்மையாய் இருக்கும் பட்சத்தில் எவ்வகையிலேனும் அதை அருளி சிறப்பாக்குவான் என்ற மூலக்கருத்துடன் பயான் செய்தார். இதில் தாய் தந்தையரை கவனித்து அவர்களின் வாழ்த்தை பெறுவதன் அவசியத்தினை மிக அற்புதமாக நபிகளார் கூறிய ஹதீஸின் சம்பவங்களை மேற்கோள்காட்டி பேசினார்கள்.

பிறகு தஸ்ஃபீஹ் நபீல், திக்ரு மஜ்லிஸ், தவ்பா நிகழ்வு மற்றும் கியாமுல் லைல் என்னும் இரவுத் தொழுகை எல்லாம் சிற்ப்பாக நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பள்ளியின் தரைத்தளம் மற்றும் மூன்று மாடிகள் என எல்லாவற்றிலும் மக்கள் நிரம்பி அதுவும் போதாமல் கூட்டம் மிகைத்திருந்தது.. பள்ளிக்கு உள்ளேயே சற்றேரகுறைய 5000க்கும் மேற்பட்டவர்கள் இருந்திருக்ககூடும். 

சிறப்பான இரவை இறைவனின் பொருந்தம் தரும் நல்லமல்கள் செய்து மக்கள் நிறைவாக்கிவைத்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

குறிப்பு: ரமலானின் 27ம் இரவு குறித்த மாறுபட்ட நிலைப்பாடு உடையவர்களுக்கும் இப்பகிர்வும் தொடர்பில்லை. அவர்கள் ஒதுங்கிக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக