Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 6 ஜூலை, 2014

அவர்கள் நோன்பு இருந்த போதுகூட எங்களுக்கு உணவு அளித்தனர்...

இராக்கில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் சிக்கித் தவித்த இந்திய நர்ஸ்கள் 46 பேர் பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் ஏர் இந்தியா விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்த கேரளத்தைச் சேர்ந்த சாண்ட்ரா செபாஸ்டின் கூறுகையில்: "இராக்கிற்கு திரும்பிச்செல்லும் பேச்சுக்கே இடமில்லை. எங்கள் உயிரை மீண்டும் பணயம் வைக்க நாங்கள் தயாராக இல்லை.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதிதான் இராக் சென்றேன். திக்ரித் அரசு பயிற்சி மருத்துவமனையில் பணியாற்றிய எனக்கு கடந்த 4 மாதங்களாகவே ஊதியம் வழங்கப்படவில்லை.
அந்த மருத்துவமனையில் நாங்கள் 23 பேர் மட்டுமே இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் எங்களுடன் மேலும் 15 பேர் சேர்ந்து கொண்டனர்.
திக்ரித் நகர் கிளர்ச்சியாளர்கள் பிடியில் சென்ற பிறகு அந்த மருத்துவமனையில் சிக்கியிருந்த நாட்களில், பலமுறை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் எங்களை வெளியேறுமாறு மிரட்டியிருக்கின்றனர். ஆனாலும் இந்திய தூதரகம் அந்த இடத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என தெரிவித்திருந்ததால் நாங்கள் வெளியேறவில்லை. ஆனால், 3-ம் தேதி எங்களை சுற்றிவளைத்த கிளர்ச்சியாளர்கள் 15 நிமிடத்தில் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என நிர்பந்தப்படுத்தினர். நீங்கள் அனைவரும் எங்கள் சகோதரிகள். உங்களை நாங்கள் தாக்க மாட்டோம் என்றனர். ஆனாலும் எங்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை பிறக்கவில்லை. கட்டாயப்படுத்தி 4 பேருந்துகளில் நாங்கள் ஏற்றப்பட்டோம். திக்ரித்தில் இருந்து மோசுல் நகர் செல்ல 7 மணி நேரம் ஆனது. இனி ஒருபோதும் இராக்கிற்கு திரும்பிச் செல்ல மாட்டோம் என்றார்.
இராக்கில் இருந்து திரும்பிய நர்ஸ்கள் பலரும் இதையே தெரிவித்தனர். இராக்கில் நிலைமை சீரடைந்தாலும் அங்கு செல்லும் எண்ணம் இல்லை என்றனர்.
எர்ணாகுளத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் கூறுகையில்: என் மகள் ரேணு கடந்த ஆகஸ்டில் தான் இராக் சென்றாள். அவளை அங்கு அனுப்பி வைக்க 2 லட்சம் ரூபாய் கடனாக பெற்றேன். ஆனால் கடந்த 3 மாதங்களாக அவளால் பணம் அனுப்ப முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.
கோட்டயத்தைச் சேர்ந்த மெரீனா 11 மாதங்களுக்கு பின்னர் தன் மகள் ரியாவையும், மகன் மெரினையும் கட்டித் தழுவினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் எங்களை துன்புறுத்தவில்லை என தெரிவித்தார்.

கிளர்ச்சியாளர்கள் எங்களை துன்புறுத்தவில்லை:

கிளர்ச்சியாளர்கள் எங்களை துன்புறுத்தவில்லை. அவர்கள் நோன்பு இருந்த போதுகூட எங்களுக்கு உணவு அளித்தனர். அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த நர்ஸ் மெரீனா ஜோஸ் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், உயிருடன் மீண்டு வருவோம் என நாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. எங்களை பத்திரமாக மீட்க உதவிய அனைவருக்கும் நன்றி. குறிப்பாக மத்திய, மாநில அரசுகள், அதிகாரிகள், ஊடகத்தினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்தியா திரும்பியுள்ள 46 நர்ஸ்களில் 45 பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவராவார்.

நன்றி தமிழ் திஇந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக