Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 20 ஜூலை, 2014

இஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா ?

ஏதோ இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது,முகலாயர்கள் வருகைக்கு பின்னர் தான் இஸ்லாம் இந்தியாவில் நுழைந்தது என்ற பொய்யை மீண்டும் மீண்டும் கூறிவரும் 3% பார்பனர் கட்டுப்பாட்டில் உள்ள ஹிந்துத்துவ இயக்கங்களின் அடிமைகளுக்கு இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்ற நபர் யார் என்று தெரியுமா...சேர வம்சத்தை சேர்ந்த சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா.

இவரது ஆட்சி இன்றைய கேரளா மற்றும் தமிழகத்தின் தென் பகுதியில் இருந்தது .இவர் இஸ்லாத்தை ஏற்றது 6 ஆம் நூற்றாண்டில்..அதாவது முகமது நபி காலத்திலேயே மக்காவிற்கு சென்று இஸ்லாத்தை ஏற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது..
இதில் மற்றுமொரு சுவாரசிய தகவல் இவர் தமிழர் என்பதே..அதுவும் இந்தியாவில் இஸ்லாத்தை ஏற்ற முதல் நபர் தமிழர்என்பதே..
இந்தியாவில் இஸ்லாத்தை பரப்ப மக்காவில் இருந்து திரும்பும் வழியில் உடல் நல சுகவீனம் காரணமாக இறந்தார். இறக்கும் முன் மாலிக் பின் தீனார் என்ற நபி தோழரிடம் தான் இஸ்லாத்தை ஏற்றத்தையும் , தனது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் இஸ்லாத்தை பரப்ப உதவுமாறும்..மசூதி கட்ட உதவுமாறும் தனது குடும்பத்திற்கு கடிதம் எழுதினார்..இதை ஏற்றுக்கொண்ட இவரது குடும்ப இஸ்லாத்தை பார்ப்ப அனுமதிட்டதோடு இந்தியாவின் முதல் மசூதி கிபி 612 ஆம் ஆண்டு கொடுங்கநூரில் கட்டப்பட்டது ..
இந்த மசூதி இன்றுவரை உள்ளது..சேரமான் மன்னரின் அடக்கஸ்தலம் ஓமானில் உள்ளது..இந்த உண்மை தமிழர்களாகிய நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.இஸ்லாம் ஒன்றும் தமிழர்களாகிய நமக்கு வடக்கில் இருந்து வரவில்லை..மாறாக வடக்கு மக்கள் இஸ்லாத்தை ஏற்கும் முன்னமே தமிழர்களாகிய நமது முன்னோர்கள் இஸ்லாத்தை ஏற்றனர் என்பதே உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக