Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 9 ஜூலை, 2014

அல்சைமர்ஸ் நோயை இரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம்!


அல்சைமர்ஸ் எனப்படும் மூளை அழுகல் நோய் ஒருவருக்கு வரவிருப்பதை அதன் ஆரம்பகட்டத்திலேயே கண்டறியக்கூடிய வழிமுறை ஒன்றை தாங்கள் நெருங்கிவிட்டதாக பிரிட்டனில் இருக்கும் விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள்.

 ஒருவரின் ரத்தத்தில் இருக்கும் குறிப்பிட்ட பத்து புரதங்களை கொண்டு அவருக்கு அடுத்ததாக அல்சைமர்ஸ் நோய் தோன்றக்கூடும் என்று கணிக்க முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
அல்சைமர்ஸ் என்பது அடிப்படையில் நினைவிழப்பு நோயின் அதி தீவிர வடிவம். தற்போதைய நிலையில் இந்த அல்சைமர்ஸ் ஒருவருக்கு வந்திருக்கிறது என்பதை கண்டறிவது என்பது அந்த நோய் ஏற்கெனவே ஒருவருக்கு தாக்கத்தொடங்கிய பிறகே சாத்தியமாகிறது. அதற்குள் அவருக்கு அல்சைமர்ஸ் நோயின் தாக்கம் என்பது ஏறக்குறைய முற்றிய நிலையில் இருக்கும். எனவே அதை கட்டுப்படுத்துவதோ குணப்படுத்துவதோ இயலாத காரியம்.
 எனவே இந்த அல்சைமர்ஸ் ஒருவரை தாக்குமா என்பதை அதன் ஆரம்பகட்டத்திலேயே கண்டறிய முடிந்தால் அதன் அடுத்தகட்டமாக அல்சைமர்ஸ் நோய்க்கான மருந்தை கண்டறிவது சாத்தியப்படும் என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்தாக இருந்து வந்திருக்கிறது.
 அல்சைமர்ஸ் நோய் ஒருவருக்கு தாக்கத்துவங்கியதன் ஆரம்ப அறிகுறி என்பது நினைவு இழத்தல். ஆனால் எல்லா நினைவு இழப்புக்களும் அல்சைமர்ஸில் போய் முடிவதில்லை. எனவே, நினைவிழப்புக்கு உள்ளாகும் ஒருவருக்கு அது அல்சைமர்ஸ் நோயாக முற்றுமா என்பதை கண்டறிவதற்கு அவரின் ரத்தத்தில் இருக்கும் குறிப்பிட்ட பத்து புரதச்சத்துக்களை தொடர்ந்து கண்காணித்தால் அதை கண்டறிய முடியும் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள். சுமார் ஆயிரம் பேரிடம் செய்யப்பட்ட இந்த பரிசோதனைகளில், 87 சதவீதமானவர்களுக்கு அல்சைமர்ஸ் வருமா வராதா என்று துல்லியமாக கணிக்கமுடியும் என்று இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
 அதே சமயம் இந்த கண்டுபிடிப்பு என்பது நம்பிக்கையளிக்கும் நல்ல துவக்கம் மட்டுமே என்று எச்சரிக்கும் மருத்துவ விஞ்ஞானிகள், இதன் முழுபலாபலன்களும் பயனளிப்பதற்கு மேலதிக ஆய்வுகள் செய்யப்படவேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
உலக அளவில் நாலறைகோடி பேர் இந்த அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக