Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 19 ஜூலை, 2014

துஆக்கள்” என்ன இணைவைத்தலா?

இறைத்தூதர் பிறந்து வாழ்ந்த மண்ணில்,இறையச்சம் நீங்கியதோ?
மனிதனின் ஒவ்வொரு சொல்லிலும்,செயலிலும் அல்லாஹ்வின் எண்ணமும்,அச்சமும் இருக்க வேண்டுமென்று போதித்து,வழிகாட்டிய எம்பெருமானார் பிறந்து வாழ்ந்த அரபு மண்ணில் தற்போதைய மனிதர்களிடம் பெரும்பாலும் அத்தகைய இறையச்சம் காணமுடியவில்லையே?
மனிதன் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் கலப்படம்,வியாபாரத்தில் மோசடி.
தொழிலாளியின் வியர்வை உலர்வதற்கு முன் அவனது கூலியை கொடுத்து விடவேண்டுமென்ற அண்ணலாரின் அறநெறியை பின்பற்றாமை.
பெருமானாரால் அடிமைத்தனம் தகர்த்தெறியப்பட்ட அரபு மண்ணில் வெளிநாட்டு மோகம் என்ற வியாதியில் சிக்கிய பாவப்பட்ட தொழிலாளர்கள்,ஒட்டகம் மேய்க்கும் அடிமைகளாய்…
துஆ என்னும் நல்ல அமல்கள் சாகடிக்கப்பட்டதால் வந்த வினைகளோ? இவை.
ஐவேளை கடமையான தொழுகைக்கு பிறகும் கூட துஆ இல்லாத மனிதனிடம் இறையச்சம் கேள்விக்குறியே?
புனிதமான ரமலானில் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தில் நோன்பு திறக்கலாம் என்ற எனது நட்பு வட்டங்களின் அழைப்பை ஏற்று நானும் சென்றேன்.
நோன்பு திறக்க இன்னும் 10 நிமிடங்களே மீதமுள்ள நிலையில் ஒருவர் மைக் பிடிக்கிறார்.
துஆவுக்காகத்தான் என நினைத்து நானும் ஏமாந்து போனேன்.
மஃரிப் தொழுகைக்கு பிறகு கேள்வி,பதில் நிகழ்ச்சி நடக்கும். கலந்து கொள்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து பாங்கின் சப்தம் கேட்டு நோன்பு திறக்கப்படுகிறது.
நோன்பு திறக்கும் முன் கேட்கப்படும் எனது அடியானின் துஆவை நான் பெரிதும் நேசிக்கிறேன் என்ற படைத்தவனின் வாக்குறுதியை நம்பாதவர்களா இவர்கள்?
துஆ என்ன இணைவைத்தலா?துஆக்கள் குறைந்ததால் தான் அரபுலக மண்ணில் நிம்மதி தொலைந்ததோ?
துஆக்களின் மீதான அவநம்பிக்கையால் பாலஸ்தீனத்து மக்களுக்கு கூட அது உதவாமல் போய்விட்டதே?
நம்பிக்கையுடைய துஆவில் மட்டுமே அல்லாஹ்வின் அருளை பெறமுடியும் என்ற எண்ணத்தில் துஆ செய்யுங்கள்.பாலஸ்தீனத்து மக்கள் நன்மை பெறட்டும் இன்ஷா அல்லாஹ்…….

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக