Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 9 ஜூலை, 2014

பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி!


பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் சார்பாக மாபெரும் இப்தார் என்னும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று (08/07/2014) செவ்வாய்க்கிழமை எளம்பலூர் ரோட்டில் உள்ள பள்ளி வளாகத்தில்  நடைப்பெற்றது.
இவ்விழாவினை பள்ளியின் தாளாளர் சிவசுப்பிரமணியன் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்.
இவ்விழாவிற்கு பெரம்பலூர் ஜமாத்துல் உலமா சபை தலைவர் முஹம்மது முனீர், ss எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் சுல்தான் மொய்தீன்,மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் MSM என்கிற M.சுல்தான் மொய்தீன்,அரும்பாவூர் தாகிர் ,வி.களத்தூர் கமால் பாஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பள்ளியின் தாளாளர் சிவசுப்பிரமணியன் அவர்கள் நேற்று இரவு புனித யாத்திரை மேற்கொள்கிறார் எனவே அவருக்கு மா,பலா ,வாழை கொடுத்து வழி அனுப்பப்பட்டது.

இப்தார் பிறகு பள்ளி வளாகத்தில் தொழுகை நடத்தப்பட்டது.அதன் பிறகு இரவு உணவுடன் விழா  நிறைவுற்றது.இவ்விழாவிற்கு சுமார் 200 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.








நன்றி விகளத்தூர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக