Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 17 ஜூலை, 2013

பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் ஜவுளி தொழில்நுட்ப பூங்கா!

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், எறையூரில் ஜவுளித் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.
பெரம்பலூர் ஆட்சியரகத்தில் ஜவுளி தொழில்நுட்பப் பூங்கா அமைப்பது தொடர்பாக தொழில் முனைவோருடனான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது:
தமிழக முதல்வர் பெரம்பலூரை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கும், தொழில் நகரமாக மாற்றுவதற்கும் ஜவுளி தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

எறையூர் சர்க்கரை ஆலை அருகே அமையவுள்ள ஜவுளி தொழில்நுட்ப பூங்கா பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு பொக்கிஷமாக விளங்கும். பூங்கா அமையவுள்ள பகுதியில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் எளிதில் கிடைக்கும்.
இங்கிருந்து உருவாக்கப்படும் துணிகளை வெளிநாடுகளுக்கு எளிதில் ஏற்றுமதி செய்யும் வகையில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுடன் கூடிய பெருநகரங்கள் அருகில் உள்ளன. மேலும், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே அமைக்கப்பட உள்ளதால், உற்பத்தித் துணிகளை ஏற்றுமதி செய்வதற்கு சாலை வசதி உள்ளது. எனவே, ஊழியர்களும், தொழில் முனைவோரும் ஜவுளிப் பூங்காவில் வேலை செய்ய முன்வருவர் என்றார் அவர்.
கூட்டத்தில் பங்கேற்ற தொழில் முனைவோர் ஜவுளி தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கு தேவைப்படும் கட்டடம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிப்பது குறித்தும் கருத்துகளைத் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக