Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 22 ஜூலை, 2013

வக்பு வாரிய சொத்துக்களை மீட்க நடவடிக்கை: தலைவர் தமிழ்மகன் உசேன்!


பல கோடி மதிப்புள்ள வக்ப் வாரிய சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதை உடனே மீட்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார். 

திருத்தி அமைக்கப்பட்ட தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைவராக கடந்த 10 ம் தேதி அன்று அ. தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

இதனையடுத்து, சென்னை துறைமுகம் பகுதியில் உள்ள வக்ப் வாரிய அலுவலகத்தில் தமிழ் மகன் உசேன் நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அப்போது, தமிழ்மகன்உசேன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

எனக்கு மீண்டும் தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைவர் பொறுப்பு கொடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

தமிழகத்தில் பல கோடி மதிப்புள்ள வக்ப் வாரிய சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதை உடனே மீட்க உரிய நடவடிக்கை எடுப்பேன். இந்த பதவியில் இருக்கும் வரை முதல்வருக்கும், சமுதாயத்திற்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுவேன் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பா.வளர்மதி, கே.டி.பச்சைமால், வி.மூர்த்தி, பி.வி.ரமணா, எஸ். அப்துல் ரஹீம் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர், அரசு தலைமை ஹாஜி முப்தி முகமது சலாவூதின் அயூப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி ஒன் இந்தியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக