Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 24 ஜூலை, 2013

பாரதிய ஜனதா, இந்து முன்னணியின் தேர்தலை ஒட்டிய விஷமப் பிரச்சாரமும், ஆனால் அதிர்ச்சி தரும் உண்மை நிலையும் ஆதரங்களுடன்..!


பாரதிய ஜனதா, இந்து முன்னணியின் தேர்தலை ஒட்டிய விஷமப் பிரச்சாரமும், ஆனால் அதிர்ச்சி தரும் உண்மை நிலையும் ஆதரங்களுடன்..!

இங்கு இணைத்துள்ள சுற்றரிக்கைகளைப் (நோட்டீஸ்கள்) போல இன்னும் பல இடங்களிலும், அணைத்து செய்தி ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பாரதிய ஜனதா, இந்து முன்னணி போன்ற இந்துத்துவா சக்திகள் ஆடிட்டர் ரமேஷ் கொலையை இந்து முஸ்லிம் பிரச்சனையாக்கி மக்களிடையே விஷமப் பிரச்சாரத்தையும், மதக்கலவரத்தை ஏற்படுத்துவும், மக்களிடையே பீதியை உருவாக்கி வருகிற மக்களைவை தேர்தலில் சில சீட்கலாவது பெற திட்டமிடுகிறார்கள்.

இவர்கள் கூறுவதில் உண்மை உள்ளதா...? இங்குள்ள நோட்டிசைப் போல இன்னும் பல இடங்களிலும் இவர்கள் பரப்பும் இந்த கூற்று உண்மையா..?

அதிர்ச்சி தரும் உண்மைகள் செய்தி ஊடகங்களின் ஆதாரத்துடன்..

முஸ்லிம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்று வேடம் போட்டு பந்த் நடத்தும் ப.ஜ.க. வின் வேஷம் கலைக்கும் ஆதாரங்கள். தேவையான இடங்களில் பகிருங்கள் இந்தியர்களே, தமிழர்களே..!.


1. 4-7-2012 இல் நாகையில் பா.ஜ.க. மாநிலச் செயற்குழு உறுப்பினர் புகழேந்தி என்பவரை கொன்ற வழக்கில் தேடப்பட்ட "முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த முனீஸ்வரன் சரண்".


2. 23-10-2012 இல் வேலூரில் பா.ஜ.க. மருத்துவ அணியின் மாநிலச் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி என்பவரின் கொலையில் கைதானவர்களின் விவரம். கைதான ஆறு பேரும் இந்துக்கள்.


3. 19-3-2013 அன்று பரமக்குடி நகராட்சி பா.ஜ.க. முன்னாள் கவுன்சிலர் முருகன் கொலை வழக்கில் கைதானவர்கள் விவரம். இதில் ஒரு இந்துவும், மூன்று முஸ்லிம்களும் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் காரணம் இந்து முஸ்லிம் பிரச்னை அல்ல. சொத்து தகராறு.


4. 8-7-2013 அன்று ராமேஸ்வரத்தில் ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் குட்டநம்பு என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் மாந்தோப்பு ராமச்சந்திரன், முருங்கவாடி சண்முகநாதன் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.


5. 1-7-2013 அன்று வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் என்பவர் கொலையுண்ட வழக்கில் போலீசார் இன்னும் விசாரணை செய்து வருகின்றனர்.

ஆக, மேலே சொல்லப் பட்ட வழக்குகளில் ஒருவர் கூட இந்து முஸ்லிம் மதப் பிரச்சனையால் கொலை செய்யப்படவில்லை என்பது மிகத் தெளிவு.

இவ்வளவு தெளிவான ஆதாரங்கள் இருந்தும், உண்மைகள் இருந்தும், அயோக்கியத்தனமாக மக்களை பிரித்தாளும் கொள்கையை விதைத்து தமிழகத்தில் எப்படியாவது 1998ன் சூழலை திரும்ப கொண்டு வந்து பிஜேபிக்கு சில சீட்களாவது வாங்க இவர்கள் நடத்தும் வெறியாட்டத்தை நல்லவர்களே, நியாயவான்களே கண்டு கொள்ளுங்கள். இவர்களை அடையாளம் காணுங்கள்.
மக்களை சாதி, மதத்தால் பிரித்து கலவரத்தை தூண்ட நினைக்கும் இத்தகைய மனிதகுல விரோதிகளை இனம் கண்டு தனிமைப் படுத்துங்கள்.


நன்றி :
நிகழ்வுகளின் தொகுப்பு : நிழல்களும் நிஜங்களும்
ஆதாரங்கள் தேடல் : நான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக