Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 27 ஜூலை, 2013

கண்டதும் கேட்டதும்...


நமது ஊர் ஜமாலி நகர் பகுதியில் இருக்கும் மேல்நிலை குடிநீர்த் தொட்டியின்
புகைப்படம்தான் இது! ஆறு மாதங்களுக்கு முன் ஜனவரி 7 ஆம் தேதி இந்த 
புகைப்படத்தோடு ஒரு பதிவை செய்தியாக கொடுத்திருந்தேன் இதோ அந்தப் பதிவு 

“லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட 
ஜமாலி நகரில் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க 

தண்ணீர்தொட்டியின் தற்போதய புகைப்படம்தான் 

இது. இதை கூர்ந்து கவனித்தால் மேலே 

ஏறப்பயன்படும் படிக்கட்டிலே கைப்பிடிகள் உடைந்து 

மேலே செல்லமுடியாத வகையில் இருப்பதை காண 

முடியும். நமது ஊரின் கிழக்கு பகுதி முழுவதும் 

பெரும்பான்மையான பகுதிக்கு இன்று வரையில் 

இந்த நீர்தேக்கத்தொட்டியில் இருந்துதான் தண்ணீர் 

விநியோகிக்கப்படுகிறது. இந்த தண்ணீர்தொட்டியை 

சுத்தம் செய்ய பணியாளர்கள் அனுப்பப்டுகிறார்களா? 

அல்லது தண்ணீர்தொட்டி சுத்தம் 

செய்யாமலேயே தான் விநியோகித்துக்கொண்டு 

உள்ளனரா? பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என்ன 

செய்துக்கொண்டு உள்ளனர். பேரூராட்சி மன்ற 

கூட்டம் நடைபெருகிறதா? பேரூராட்சி 

செயல்படுகிறதா? நமதூரில் நிறைய இணைய 

செய்திகள் நடத்தும் தோழர்கள் இதுபோன்ற 

அத்தியாவசிய தேவைகளை பொதுமக்களின் 

பார்வைக்கும், பேரூராட்சியின் பார்வைக்கும் 

கொண்டுச்சென்று ஆக்கப்பணிகளை மேற்கொண்டால் 

உபயோகமாக இருக்கும்”. 
இதுதான் அன்று நான் பதிவிட்டது ஆறு மாத காலத்திற்க்கு மேலாகியும் இன்னும் இது சரிசெய்யப்படவில்லை! இதற்க்குப் பிறகு பேரூராட்சிக்கு வந்த நிதி அனைத்தும் தலைவர்,துணைத் தலைவர் கவுன்சிலர்கள், நிர்வாக அதிகாரி மத்தியில் கருத்து ஒற்றுமை இன்றி திரும்ப அனுப்பப்பட்டுள்ளது! கடைசியாக 15,00000/- பதினைந்து லட்சம் நிதி வந்ததும்! அதில் 3,00000/- மூன்று லட்சம் இந்தக் கைப்பிடி சுவருக்காக ஒதுக்கப்பட்டும் போர்டு மீட்டிங் போடப்படாததால் அதுவும் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் எனக்குள் எழுகின்றது! இத்தனை மாதங்களாக இந்த குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் தண்ணீர் வினியோகிக்கும் பட்சத்தில் மக்கள் கண்டிப்பாக சுகாதாரக்கேடால் பாதிக்கப்படுவது உறுதி! இதற்கு முடிவுக் கேள்விக்குறியாக உள்ளது?

குறிப்பு : இது சம்மந்தமாக நமது இணையத்தளத்தில் நாம் அன்றே மே 20 2012 அன்று இதை சுட்டிக்காட்டி உள்ளோம் . அதனுடன் லிங்கை கீழே செடுக்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக