Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நமதூர் மாணவி இரண்டாம் இடம்....

பெரம்பலூர் புனித தேமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது.
போட்டியில், பெரம்பலூர் மாவட்டப் பள்ளிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் முனைவர் சு. தம்புசாமி முன்னிலையில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி இரா. கலைவாணி முதல் இடத்தையும், பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளி மாணவி ப.ஷெக்கிலா குல்மான் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். கட்டுரைப் போட்டியில் வி. களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஷா. நஜிமுன்னிஷா முதல் இடத்தையும், லப்பைக்குடிகாடு அரசு
பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ப. பாமிதாபானு இரண்டாமிடத்தையும் பிடித்தனர். பேச்சுப் போட்டியில், பெரம்பலூர் மெவ்லானா மேல்நிலைப்பள்ளி மாணவன் சி. அலிமுதீன் முதல் இடத்தையும், வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி து. வான்மதி இரண்டாமிடத்தையும் பிடித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 7 ஆயிரம், சான்றிதழ் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட உள்ளது.
ஓய்வு பெற்ற தமிழாசிரியர்கள் ராசு, பாலசுப்ரமணியன், சங்கரன், நல்லாசிரியர்கள் சேக்தாவூத், சுந்தரம், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர்கள் கோ. பத்மாவள்ளி, பா. சிலம்பரசன், வேப்பூர் பள்ளி தமிழாசிரியர் மு. மகாலட்சுமி, மருவத்தூர் பள்ளி தமிழாசிரியர் இரா. ரமணி, குரும்பலூர் பள்ளி தமிழாசிரியர் செ. மணிமேகலை ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.


நமது இனையத்தளம் மூலம் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக