Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 17 ஆகஸ்ட், 2013

பெண்கள் பலிகடாக்களா?


பெண்கள் பலிகடாக்களா?

ஹிஜ்ரி 20ல் முஸ்லிம்கள் எகிப்தைக் கைப்பற்றினர். அதன் கவர்னராக இருந்த அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்களிடம் அங்குள்ள கிறிஸ்தவத் தலைவர்கள் வந்து ஒரு முக்கியப் பிரச்னையைக் கூறினர். எகிப்தின் பொருளாதாரம் பெருமளவு நைல் நதியையே சார்ந்துள்ளது. நதியைத் திருப்திப்படுத்துவதற்காகவும், அதன் நீர் வற்றாமலிருக்கவும் அங்குள்ள மதச் சம்பிரதாயப்படி ஒவ்வொரு வருடமும் நைல் நதிக்கு ஒரு மனிதப் பலி கொடுக்கப்படும். ஆதலால் ஒவ்வொரு வருடமும் ஜூன் 12 அன்று இரவு ஒரு கன்னிப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து, மணப்பெண் போல் அலங்கரித்து நைல் நதியில் வீசி எறிந்து விடுவர். இப்படிச் செய்யவில்லையெனில் அந்த நதி வற்றிக் காய்ந்து விடும் என்று கவர்னரிடம் அந்தக் கிறிஸ்தவக் குழுவினர் கூறினர்.
கவர்னர் அவர்கள் எந்தத் தயக்கமும் காட்டாமல், “இந்த மூடப்பழக்கப் பலியை நான் ஒருபொழுதும் அனுமதிக்க மாட்டேன்” என்று அந்தப் பலியைத் தடை செய்தார்கள். இந்த வருடம் யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்களோ, ஒருவேளை அது நாமாக இருக்குமோ என்று மரண பயத்தில் தத்தளித்துக்கொண்டிருந்த எகிப்திய கன்னிப் பெண்கள் அன்றுதான் விடுதலைப் பெருமூச்சு விட்டனர். இஸ்லாம் அங்கே காலூன்றி அந்தப் பெண்களைக் காப்பாற்றியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக