Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

அறுவை சிகிச்சையின் கவணக்குறைவு வயிற்றில் இருந்த பஞ்சால் - நமதூர் பெண் இறப்பு...

நமதூரை சேர்ந்தவர் ராஜா முஹம்மது இவர் எலக்ட்ரீசியன் . இவருடைய மனைவி தவ்லத் பர்வீன் (25). இவர்களுக்கு 2 மகள் , 2 மகன் உள்ளனர். குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக தவ்லத் கடந்த ஜனவரி 31 ம் தேதி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு பிப்ரவரி 4 ம் தேதி தவ்லத் பர்வீனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தவ்லத்துக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதையடுத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஒன்றுமில்லை என கூறியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 20 ம் தேதி தவ்லத்திற்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து திருச்சி உறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது வயிற்றில் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையின் போது பஞ்சை வைத்து தைத்து இருப்பதாகவும், இதனால் குடல் அழுகி விட்டதாகவும் கூறினர். இதையடுத்து 21ம் தேதி மீண்டும் அறுவை சிகிச்சை செய்து பஞ்சை வெளியே எடுத்தனர். ஆனால் நேற்று தவ்லத் இறந்தார்.(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்.) தகவல் அறிந்த உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர்.
அவர்கள் கூறுகையில் பெரம்பலூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின்போது, தவ்லத் வயிற்றில் பஞ்சு வைத்து தையல் போட்டுவிட்டனர்.
அஜாக்ரரத்தை இருந்த அரசு மருத்துவமனை டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் இடம் புகார் அளிக்கப்படும் என்றனர்.


நன்றி தினகரன்


5 கருத்துகள்:

  1. எண்ணப்பா ஊரு இது. இந்த சம்பவத்துக்காக ஊரில் உள்ள மக்களும் ஊரு ஜமாத் மற்றும் ஊரில் உள்ள இயக்கம் எல்லாம் எங்க போச்சு இவர்களுக்கு நியாயம் கிடைக்க வேன்ன்டாம.......... ? ஹமீது .

    பதிலளிநீக்கு
  2. நீங்க வேர அவ அவ அவனுடைய சுயநலதைத்தான் பார்க்கிறான். கிழக்கு ஜமாத் மேற்கு ஜமாத்துங்கருதும் TNTJ தாருஸ்ஸலாம் என்கிறதும் இப்படித்தான் அப்புறம் ஒன்னும் இரண்டு பேறு தமுமுக பி.எஃப்.ஐ என்கிறதுமாக தான் இருக்கு . இதுவும் இல்லாமல் துபாயில் தீன் இயக்கம் இவர்களை பற்றி செல்லவே வேனான் ஏன் என்றால் மேலே சென்ன அனைவரையும் மிஞ்சி இருக்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் அந்த பெண்னுக்காக தூவா செய்வேம்.

    பதிலளிநீக்கு
  3. எந்த பொன்னுக்கும் ஈந்த நெல்லம்மை வரக்குடது ஈதை மனீத உரீமை கொர்ட்ல்
    வ்லக்கு பொடனும்

    பதிலளிநீக்கு
  4. எந்த பொன்னுக்கும் ஈந்த நெல்லம்மை வரக்குடது ஈதை மனீத உரீமை கொர்ட்ல்
    வ்லக்கு பொடனும்

    பதிலளிநீக்கு