Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 14 ஆகஸ்ட், 2013

பெரம்பலூர் மாவட்ட மனித வள அறிக்கை தயாரித்து வழங்க, முன் அனுபவமுள்ள நிறுவனங்களிடமிருந்து கருத்துரு வரவேற்கப்படுகிறது - மாவட்ட ஆட்சியர்

பெரம்பலூர் மாவட்ட மனித வள அறிக்கை தயாரித்து வழங்க, முன் அனுபவமுள்ள நிறுவனங்களிடமிருந்து கருத்துரு வரவேற்கப்படுகிறது என்றார்  மாவட்ட ஆட்சிர் தரேஸ் அஹமது.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் வளர்ச்சியடைந்த நாட்டிற்குச் சரி சமமாகவும், இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியமைக்க தமிழ்நாடு பார்வை 2023 வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டங்களில் பல்வேறு பிரச்னைகளை வெளிக்கொணர்வதற்கும், அந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கும் உறுதுணையாக இருக்கும் வகையில் மாவட்ட மனிதவள அறிக்கை தயாரிக்க, மாநில திட்டக்குழுவால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு, பெரம்பலூர் மாவட்ட மனிதவள அறிக்கை தயார் செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்த அறிக்கையை தயார் செய்வதில் தகுதியுள்ள, முன் அனுபவமுள்ள நிறுவனங்களின் பணியை பயன்படுத்திக் கொள்ள மாநில நிதிக்குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட மனிதவள அறிக்கையை தயார் செய்வதில் முன் அனுபவமுள்ள நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட நிறுவனம் தங்களது வரைவு அறிக்கையை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
விருப்பமுள்ள நிறுவனங்கள், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட திட்டமிடும் அலுவலகத்திலிருந்து வரையறைகள் மற்றும் நெறிமுறைகளை பெற்றுக் கொள்ளலாம்.
ஆக. 24-க்குள் தங்களது கருத்துருக்களை, மாவட்ட திட்டமிடும் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக