Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 2 நவம்பர், 2013

நமதூர் பள்ளி மாணவர்கள் மண்டல அளவிலான போட்டிற்கு தகுதி....

பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்வர் கோப்பைக்காக மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த 29ம் தேதி துவங்கி தொடர்ந்து நடைபெற்றது.

இதில் வேப்பந்தட்டை அருகே உள்ள அயன்பேரையூர் விஸ்டம் மெட்ரிக் பள்ளி மாணவிகள்,  14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கைப்பந்து  போட்டியில் அபாரமாக ஆடி முதலிடத்தை வென்றனர். இதே போல், 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கைப்பந்து போட்டியிலும் திறமையாக ஆடி முதலிடத்தை பெற்றனர். இதையடுத்து, இவர்கள் அனைவரும் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெற உள்ள மண்டல அளவிலான கைப்பந்து போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இதைத் தொடர்ந்து கைப்பந்து போட்டிகளில் சாதனை படைத்த பள்ளி வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா பள்ளியின் சார்பில் நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்த நிர்வாக இயக்குநர் ஜியாவுதீன், முன்னிலை வகித்த பள்ளித் தலைமையாசிரியர் பவுல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கண்ணன், ஆசிரியர் கலைச் செல்வன் உள்ளிட்ட பலர் மாணவிகளை மனதார வாழ்த்தினர்.
இதே போல், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் செஸ் போட்டியிலும் பெரம்பலூர் மாவட்டம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பேரில் 6 பேர் விஸ்டம் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களை பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்- ஆசிரியர் கழகத்தினரும் பாராட்டினர்.

1 கருத்து: