Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 4 நவம்பர், 2013

இந்த வெளிநாட்டு வாழ்க்கை இருக்கிறதே ??


இந்த வெளிநாட்டு வாழ்க்கை இருக்கிறதே ?? கொடுமையான நரக வாழ்க்கைங்க , திரும்பிய பக்கம் எல்லாம் பணம் இருக்கும்,ஆனால் நிம்மதி இருக்காதுங்க , நாங்கள் விமானம் ஏறினோமோ அன்னைகே எங்கள் காதல் தோல்விதாங்க, பணம் வேலை இந்த இரண்டு சக்கர வாகன பயணம் எங்கள் வாழ்க்கைங்க , மனம் விட்டு பேச ஒரு ஆறுதல் கிடையாது. ஒரு தமிழனை பார்த்தால் குடும்பத்தில் ஒருவனை பார்ப்பது போல் ஒரு சந்தோஷம்ங்க, சாப்பாட்டில் உப்பும் காரமும் இருக்கிறதா ? என்று எங்களுக்கு தெரியாதுங்க ..ஆனால் கண்ணீரில் உப்பும் மனதில் காரத்தையும் வைத்து கொண்டு வாழுறோம்ங்க. 45 நாள் விடுப்புக்கு மட்டும் எங்க மனசு பூக்கும்ங்க.ஆனால் 44வது நாள் நைட் எங்க மனசு வாடிடும்ங்க, இங்க அப்பா அம்மா இல்லைங்க , நாங்களே எங்களுக்கு உறவுதாங்க, நாங்க அடிக்கடி சொல்லுற ஒரு வார்த்தைங்க -""பணம் எப்படியாவது அனுப்பிடுவோம்னு தாங்க "",, கஷ்ட படுறோம்ங்க. .தங்கச்சி கல்யாணத்துக்கு பணம் அனுப்பிடுவோம்ங்க ,
,ஆனால் கல்யாணத்துக்கு நாங்க போகமாடோம்ங்க. .குழந்தை பொறந்துடும்ங்க,,ஆனா பாக்க முடியாதுங்க,,அப்பா ஆனா அப்பாவிங்க ,எங்களுக்கு தாங்க அந்த வேதனையும் வலியும், .நாங்க சென்ட் அடிச்சுட்டு நாட்டுக்கு வரலைங்க,,எங்க ரத்த வாடை உங்களுக்கு தெரியகூடாதுனு தாங்க பூசிக்கிறோம் .நாங்க நெறைய பொய் பேசுவோம்ங்க -நாங்க சந்தோஷமா இருக்கோம்னு. ஏதோ ஒன்னு இன்னும் தேடி அலைஞ்சிகிட்டே இருகோம்ங்க ,,ஆனா என்னான்னு தான் தெரிலைங்க. அம்மா வச்ச சாம்பார் குழம்பு சாப்பிடலான கூட பரவாஇல்லைங்க,,ஆனா மோந்து கூட பாக்க முடியாதுங்க.. அடிக்குற வெயில மனக்குற மல்லிபூ கூட ""ஐயோ" னு கத்தும்ங்க,நாங்க கத்தமடோம்ங்க,,ஏன்னா கத்த நாக்குல தண்ணி இல்லைங்க, ,இன்னும் கஷ்ட பட நாங்க தயார்ங்க,எங்க குடும்பம் சந்தோஷமா இருந்த போதும்ங்க,,,,,,,,,,,,,,,,,,,,

மின்னஞ்சல் மூலமாக
முஹம்மது உசேன்

2 கருத்துகள்: