Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 25 நவம்பர், 2013

போக மாட்டார்கள் புதியவர்களிடம் ........

போக மாட்டார்கள் புதியவர்களிடம் ........
அன்னை இருக்கிறாள் தந்தை இருக்கிறார் ,மனைவி இருக்கிறாள் - நானும் இருக்கிறேன்
வெகு தொலைவில்!

அள்ளி முத்தமிடவேண்டிய என் பிஞ்சு குழந்தையை
தொட்டு தடவி பார்த்தேன்
புகைப்படத்தில்!

மழலையின் குரலை கைபேசியில் கேட்டு
கதறி அழுதது என் மனம் கண்களின் வழியாக
சத்தமே இல்லாமல்!

எதிர் திசையில் இருந்து ஒரு குரல்,அட குழந்தையின் குரலை கேட்டு சந்தோசத்தை பாரு!

எல்லோரிடமும் பேசினேன்-எல்லோருக்கும்
என் குழந்தையை பற்றியே பேச்சு ,சந்தோசத்தில்!

கடைசி சுற்றாக வந்தது என் மனைவியிடம்
அவள் மட்டும் கேட்டாள் '' எப்போ வருவிங்க''!!

என் குரல்வளையில் யாரோ நெரிப்பது போல!
என் குரலை என்னாலே கேட்க முடியவில்லை!

கனைத்து விட்டு பின்பு சொன்னேன்
உங்களுக்காகத்தானே ! - போய்விடலாமா
என தோன்றியது உள்ளத்தில்!
கடைசியாக ஒரு வருடம் என ஆறுதல் சொன்னது என் மனம்!!!

கடைசியாக முடிவு எடுத்தே விட்டேன் நான்,நாட்டிற்கு செல்ல!
இனியும் தாமதிக்க முடியாது - காரணம்
கம்பெனியில் முடிந்து விட்டது என் வயது வரம்பு!

ஊருக்கு சென்றேன் நான் ,மூட்டை முடிச்சுடன் - கூடவே
மூட்டு வழியும் முதுகு வலியும்!!!

என் இளமையெல்லாம் பாலைவனத்தில் விட்டு விட்டு
வீடு திரும்பினேன்
விழி பிதிங்கினேன் களவு கொடுத்த கணவனாய்!!!

புகைப்படத்திலே பார்த்து பார்த்து பழகிய
என் பிள்ளைகள் இப்போதும் பார்கிறார்கள்
அப்படியே !
தூரத்தில் வைத்து.......

கண்களில் பிரகாசத்தோடு
கைகளை நீட்டி அழைத்தேன் அவர்களை,உள்லிருந்து என் மனைவியின் குரல்

போகமாட்டார்கள் புது ஆளிடம்....???????

மின்னஞ்சல் மூலமாக
பாஷா ஹாஜா மொய்தீன்

1 கருத்து: